என் மலர்
நீங்கள் தேடியது "ஷ்ரேயாஸ் அய்யர்"
- சீதா ராமம் படத்தின் மூலம் மிருணாள் தாகூர் புகழ்பெற்றார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் காயமடைந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.
இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர், "நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது" என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுரை எழுதினார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசித்துள்ளது.
ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் தற்போது குணமடைந்து ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதுகு வலிக்கு சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அசௌகரியமாக உணர்ந்துள்ளதாக தகவல்.
- 6 மாதம் ரெட்-பால் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷ்ரேயாஸ் அய்யர், பிசிசிஐ-யிடம் ரெட்-பால் (டெஸ்ட்) கிரிக்கெட்டில் இருந்து 6 மாதம் காலம் விலகி இருக்க அனுமதி கேட்டுள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் வேண்டுகோளை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் அவருடைய பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. அதேபோல் ரஞ்சி கோப்பை சாம்பியனுக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா விளையாடும் இரானி கோப்பைக்கும் அவருமைய பெயர் பரிசீலனை செய்யப்படமாட்டாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா ஏ- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் விளையாடிய அவர், 2ஆவது டெஸ்டில் இருந்து விலகினார்.
முதுகு வலி காரணமாக லண்டனில் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் இருந்து மீண்டும் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாடும் போது, அசௌகரியமாக உணர்ந்துள்ளார். இதனால் டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தார். தனக்கு 6 மாதம் ஓய்வு தேவை என பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 தொடருக்குப்ப பிறகு துலீப் டிராபி அரையிறுதியில் விளையாடினார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் விளையாடினார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷ்ரேயாஸ் அய்யருக்கு முதுகில் பிரச்சினை ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது காயத்தின் வீரியம் அதிகமானது. இதனால் ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அதன்பின் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். 2023 ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- ஷ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
- ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். இவரது தலைமையிலான பஞ்சாப் அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதி, சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இந்தத் தொடரில் 17 போட்டிகளில் 604 ரன்கள் விளாசினார்.
இவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்காக இந்திய அணியில் இவர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நல்ல ஃபார்மில் உள்ள அவரை ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணியின் கேப்டனாக இவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால் அவர் கேப்டனாக நியமிக்கபடவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற பெறுகிறது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாடியது கிடையாது.
- அவர்கள் சிறப்பாக பந்து வீசினர். க்ருணால் அற்புதமானவர்.
- நிறைய இளைஞர்கள் தங்கள் முதல் சீசனை விளையாடினார்கள்
ஐபிஎல் 2025 சீசனில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், "சோகமாக இருந்தது, ஆனால் நாங்கள் இதுவரை வருவதற்காக வாய்ப்பை பெற்றதற்கான பாராட்டுகள் நிர்வாகத்திற்கும் ஒவ்வொரு வீரருக்கும் சேரும்.
நாங்கள் இங்கு விளையாடிய கடைசி ஆட்டத்தை கருத்தில் கொண்டால், 200 ரன்கள் வரலாம் என தனிப்பட்ட முறையில் நினைத்தேன்.
அவர்கள் சிறப்பாக பந்து வீசினர். குருணால் அற்புதமானவர், தனது அனுபவத்தைப் பயன்படுத்தினார், அதுதான் திருப்புமுனை.
எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு நபரைப் பற்றியும் பெருமைப்படுகிறேன், நிறைய இளைஞர்கள் தங்கள் முதல் சீசனை விளையாடினார்கள். அவர்களின் அச்சமின்மை அற்புதமானது.
வேலை பாதி முடிந்துள்ளது, அடுத்த ஆண்டு நாம் அதை வெல்ல வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் மாறிய விதம் நேர்மறையானது, அவர்கள் நிறைய அனுபவத்தைப் பெற்றுள்ளனர், அடுத்த ஆண்டு அதை நாம் கட்டியெழுப்ப முடியும்," என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார். 191 ரன்கள் இலக்கு என்ற நிலையில் 184 ரன்களில் பஞ்சாப் தோற்றது குறிப்பிடத்க்கது. இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இரண்டாம் இடம் பிடித்ததற்கான பரிசுத் தொகையாக ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது.
- முதலில் ஆடிய பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஆர்சிபி 10 ஓவரில் 106 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
சண்டிகர்:
சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆர்சிபி அணி 10 ஓவரில் 106 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், குவாலிபையர் 1 சுற்றில் தோல்வி அடைந்தபின் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:
முதல் இன்னிங்சில் அதிக விக்கெட்களை பவர் பிளேவில் இழந்தோம். நாங்கள் செய்த தவறில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் என்னுடைய முடிவுகளை சந்தேகிப்பது கிடையாது.
நாங்கள் சரியான இலக்கை நோக்கி தான் சென்று கொண்டிருந்தோம். எங்கள் திட்டத்தை களத்தில் பிரதிபலிக்க முடியவில்லை. இந்தத் தோல்வியில் பவுலர்களை குறைசொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்படி ஒரு குறைந்த ஸ்கோரை யாராலும் தற்காத்துக் கொள்ள முடியாது.
நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம். எனவே எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நன்றாக பயிற்சி செய்யவேண்டும். நாங்கள் இங்கு விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் ஆடுகளத்தின் பவுன்ஸ் தன்மை வித்தியாசமாக இருந்தது. இதுபோல ஒரு காரணத்தை எல்லாம் தொழில்முறை கிரிக்கெட்டில் சொல்ல முடியாது. சூழலுக்கு ஏற்ப சரியாக பேட்டிங் செய்து ரன்கள் சேர்க்க வேண்டும்.
நாங்கள் மோதலில் தோற்றுவிட்டோமே தவிர, போரில் தோற்கவில்லை. இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.
- ஷ்ரேயாஸ் அய்யர் 36 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
- பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தனர். அவர்களின் எண்ணம் போன்று பந்து பேட்டில் நன்றாக பட்டது.
ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பிரப்சிம்ரன் சிங். இதனால் முதல் ஓவரில் பஞ்சாப் அணிக்க 14 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரி அடிகக் 16 ரன்கள் கிடைத்தது. 3ஆவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஆர்யா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். பிரப்சிம்ரன் ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. அத்துடன் பஞ்சாப் கிங்ஸ் 53 ரன்கள் சேர்த்தது.
4ஆவது ஓவர ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஆர்யா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது.
5ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். பிரப்சிம்ரன் சிங் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்தது. 6ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தன. இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.
7ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். இவர் 23 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.
அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் வதேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 12.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. ஷ்ரேயாஸ் அய்யர் 22 பந்தில் அரைசதம் அடித்தார்.
13.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருக்கும்போது வதேரா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங் சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 17ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் 17 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 205 ரன்கள் குவித்தது.
18ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு 5 ரன்கள்தான் கிடைத்தது. 18 ஓவர் முடிவில் பஞ்சாப் 210 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில் 27 ரன்கள் கிடைத்தன.
ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- இந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார்.
- ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.
வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வெளுத்து வாங்கிய ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடி வருகிறார்.
தற்போது 5-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள இந்த ஜோடியில் ஷ்ரேயஸ் ஐயர் 41* (77) ரன்களும் புஜாரா 42* (116) ரன்களும் எடுத்திருந்த போது முதல் நாள் தேநீர் இடைவெளி வந்தது. அப்போது இந்தியா 174/4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார். அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41* என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அளவில் சொதப்பாமல் குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார்.
இதன் மூலம் 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.
இதற்கு முன் சச்சின் முதல் டோனி உட்பட வரலாற்றின் அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களுடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்ததில்லை. மேலும் என்ன தான் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனம் இவரிடம் இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.
அதன் காரணமாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை நட்சத்திர வருங்கால வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.
- டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான்.
- சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
வங்காள தேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களது பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.
முதல் நாள் முடிவில் 90 ஓவர் விளையாடிய இந்திய அணி 278 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்தது. புஜாரா 90, ஸ்ரேயாஸ் 82*, ரிஷாப் பண்ட் 46, கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களை அடித்திருந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான விளையாட்டு இந்திய அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இருந்தாலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான். உண்மையை சொல்ல வேன்றுமென்றால், இந்திய கிரிக்கெட் அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவரது (ஸ்ரேயாஸ் ஐயர்) விளையாட்டு உண்மையிலும் சிறப்பான ஒன்று தான். அதில் சந்தேகம் வேண்டாம். அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதுகு வலி காரணமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார்.
- ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் ரஜத் பட்டிதார் அணியில் இடம்பிடித்துள்ளார்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதுகு வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார். ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் அணியில் இடம்பிடித்துள்ள பட்டிதார் (வயது 29) இன்னும் சர்வதேச போட்டியில் அறிமுகமாகவில்லை. கடந்த டிசம்பர் மாதம் வங்காளதேசத்தில் நடந்த ஒருநாள் தொடருக்கான அணியில் பட்டிதார் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் விளையாடவில்லை. அவர் 51 முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 1648 ரன்கள் சேர்த்துள்ளா. 34.33 சராசரி, 97.45 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
- முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அய்யர் விலகியிருந்தார்.
- 2-வது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்த மாதம் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது. மேலும் அவரது மறுவாழ்வுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. மேலும் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவர் நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.
புதுடெல்லி:
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை.
இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.
பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவருக்கு காயம் குணமடையாததால் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷ்ரேயஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார். உடற்தகுதிக்கு தேர்வானதை அடுத்து அவருக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற வீரர்களின் விவரம் வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் சூர்யகுமார் யாதவ்.
- ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது.
- 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் அய்யர் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4-வது நாளில் பேட்டிங் செய்யாமல் போட்டியில் இருந்து விலகினார்.
அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்களின் அறிக்கை விவரம் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே முதுகு வலி பிரச்சினையால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை தவற விட்டு இருந்த ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளார்.
அத்துடன் வருகிற 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம் தான். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.






