என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

அதுதான் திருப்புமுனை.. ஐபிஎல் தோல்வி பற்றி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் சொன்னது இதுதான்
- அவர்கள் சிறப்பாக பந்து வீசினர். க்ருணால் அற்புதமானவர்.
- நிறைய இளைஞர்கள் தங்கள் முதல் சீசனை விளையாடினார்கள்
ஐபிஎல் 2025 சீசனில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், "சோகமாக இருந்தது, ஆனால் நாங்கள் இதுவரை வருவதற்காக வாய்ப்பை பெற்றதற்கான பாராட்டுகள் நிர்வாகத்திற்கும் ஒவ்வொரு வீரருக்கும் சேரும்.
நாங்கள் இங்கு விளையாடிய கடைசி ஆட்டத்தை கருத்தில் கொண்டால், 200 ரன்கள் வரலாம் என தனிப்பட்ட முறையில் நினைத்தேன்.
அவர்கள் சிறப்பாக பந்து வீசினர். குருணால் அற்புதமானவர், தனது அனுபவத்தைப் பயன்படுத்தினார், அதுதான் திருப்புமுனை.
எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு நபரைப் பற்றியும் பெருமைப்படுகிறேன், நிறைய இளைஞர்கள் தங்கள் முதல் சீசனை விளையாடினார்கள். அவர்களின் அச்சமின்மை அற்புதமானது.
வேலை பாதி முடிந்துள்ளது, அடுத்த ஆண்டு நாம் அதை வெல்ல வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் மாறிய விதம் நேர்மறையானது, அவர்கள் நிறைய அனுபவத்தைப் பெற்றுள்ளனர், அடுத்த ஆண்டு அதை நாம் கட்டியெழுப்ப முடியும்," என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார். 191 ரன்கள் இலக்கு என்ற நிலையில் 184 ரன்களில் பஞ்சாப் தோற்றது குறிப்பிடத்க்கது. இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இரண்டாம் இடம் பிடித்ததற்கான பரிசுத் தொகையாக ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது.






