search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகல்
    X

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகல்

    • முதுகு வலி காரணமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார்.
    • ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் ரஜத் பட்டிதார் அணியில் இடம்பிடித்துள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதுகு வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்க மாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார். ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

    ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதில் அணியில் இடம்பிடித்துள்ள பட்டிதார் (வயது 29) இன்னும் சர்வதேச போட்டியில் அறிமுகமாகவில்லை. கடந்த டிசம்பர் மாதம் வங்காளதேசத்தில் நடந்த ஒருநாள் தொடருக்கான அணியில் பட்டிதார் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் விளையாடவில்லை. அவர் 51 முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 1648 ரன்கள் சேர்த்துள்ளா. 34.33 சராசரி, 97.45 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

    Next Story
    ×