search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brad Hogg"

    • இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் ரிக்கி பாண்டிங்கை விட டோனி முன்னிலை பெறுகிறார்.
    • 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் டோனி படைத்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா 1999 உலகக் கோப்பை வென்று அசத்தியது. அவருக்குப்பின் பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங் அவரையும் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தி 2007, 2011 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தார்.

    2007-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி முக்கிய நேரங்களில் தைரியமான முடிவெடுத்த எம்எஸ் டோனி இந்தியாவுக்கு முதல் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார்.

    மேலும் சச்சின் முதல் லக்ஷ்மன் வரை அனைத்து மூத்த வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய அவர் 2010-ல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக தரம் உயர்த்தி 2011இல் சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் மற்றுமொரு தாகத்தை தணித்தார்.

    அதை விட 2013-ல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் களத்திற்கு வெளியே வாரியத்திலும் அணி நிர்வாகத்திலும் நடந்த அரசியல்களை ரிக்கி பாண்டிங்கை விட டோனி மிகச் சிறந்ததாக கையாண்டார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பாராட்டியுள்ளார்.

    இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

    ரிக்கி பாண்டிங்கிடம் அற்புதமான அணி இருந்தது. டோனியும் சிறந்த அணியை பெற்றிருந்தார். என்னைப் பொறுத்த வரை இருவரும் சிறப்பாக செயல்பட்டு நல்ல கேப்டன்ஷிப் சாதனைகளை படைத்துள்ளார்கள். அவர்களை நாம் பிரிக்க முடியாது. இருப்பினும் ரிக்கி பாண்டிங்கை விட இந்திய கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி நிறைய அரசியல் ரீதியான நிகழ்வுகளை கொண்டிருந்தார். அது தான் ரிக்கி பாண்டிங்கை விட டோனியை முன்னிலைப்படுத்தும் அம்சமாகும். ரிக்கி பாண்டிங்கின் மற்றொரு விஷயம் என்னவென்றால் அவரைச் சுற்றி நிறைய அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள்.

    உண்மையில் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் எப்படி அசத்த வேண்டும் என்பதை தெரிந்திருந்தார்கள். அதனால் விளையாட்டின் சில அம்சங்களை மட்டுமே பாண்டிங் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அவரது தலைமையில் பெரும்பாலான வீரர்கள் அணுகுமுறைகள், ஒழுக்கம், என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் டோனி தலைமையில் அப்படி ஒரு அணியில்லை. அது கடினமான ஒன்று. அத்துடன் இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் அவரை விட டோனி முன்னிலை பெறுகிறார். சாரி ரிக்கி.

    இவ்வாறு பிராட் ஹாக் கூறினார்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடர் முடிந்துள்ள நிலையில் நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டி20 தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    ஒருநாள் மற்றும் டி20 தொடரைக் காட்டிலும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யார் வெற்றி பெறுவார்? என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் குல்தீப் யாதவ் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலியாவின் ரிஸ்ட் ஸ்பின்னரும், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் வர்ணனையாளராக செயல்பட இருப்பவரும் ஆன பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் ஹாக் கூறுகையில் ‘‘இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் விதவிதமான மாறுபட்ட பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். நான் டெஸ்ட் போட்டியில் அவரை உறுதியாக தேர்வு செய்வேன்.

    குல்தீப் யாதவ் அதிக அளவில் ஸ்டம்பை தாக்கும் வகையில்தான் பந்து வீசுகிறார். அவருடைய குயிக்-ஆர்ம் ஆக்சன் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் இறங்கி வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, தற்போதைய பந்து வீச்சைவிட சற்று கூடுதல் வேகத்தை வெளிப்படுத்த வேண்டும். இது பேட்ஸ்மேன்கள் பந்தை பலமாக தூக்கி அடிப்பதை தடுக்கும்’’ என்றார்.
    ×