search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி"

    • ஹால் ஆப் பேம் பட்டியலில் டிவில்லியர்சை இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தி உள்ளது.
    • இதற்காக டிவில்லியர்ஸ்-க்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டைர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 3 கிரிக்கெட் நட்சத்திரங்களை 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த 3 பேரில் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உங்கள் இடத்திற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஹால் ஆப் பேம் என்பது விளையாட்டில் உங்கள் தாக்கத்தின் பிரதிநிதித்துவமாகும். மேலும் உங்களுடையது உண்மையிலேயே தனித்துவமானது.

    மக்கள் எப்போதும் உங்கள் திறனைப் பற்றி பேசுகிறார்கள், அது சரி. நான் விளையாடியதில் நீங்கள் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர். முழுவதிலும் நம்பர் ஒன் வீரர். நிறைய வீரர்கள் ஈர்க்கக்கூடிய எண்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் மிகச் சிலரே பார்ப்பவர்களின் ஆன்மாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

    என்னைப் பொறுத்தவரை, ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் வைத்திருக்கக்கூடிய மிக உயர்ந்த மதிப்பு அதுவே. அதுவே உங்களை மிகவும் சிறப்பானதாக்குகிறது. உங்களுடன் மற்றும் எதிராக நான் விளையாடும் நேரத்தில், நீங்கள் எப்போதுமே விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதலை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

    மேலும் நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அதிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலகியிருக்கவில்லை.

    என்று விராட் கோலி கூறினார்.

    • கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை நீது டேவிட் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டைர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 3 கிரிக்கெட் நட்சத்திரங்களை 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தியது.

    இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர்.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




    • டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடம் பிடித்தார்.
    • அவரை தொடர்ந்து அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 5 விக்கெட், 2-வது போட்டியில் 6 விக்கெட் என மொத்தம் 11 விக்கெட் சாய்த்தார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    அவரை தொடர்ந்து அஸ்வின் 2வது இடத்தில் நீடிக்கிறார். ஹேசில்வுட் 3வது இடத்திலும், கம்மின்ஸ் 4வது இடத்திலும் உள்ளார். ரபடா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

    • ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருது துனித் வெல்லாலகேவுக்கு அளிக்கப்பட்டது.
    • சிறந்த வீராங்கனைக்கான விருதினை இலங்கை அணியின் ஹர்ஷிதா வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.

    வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ், இலங்கையின் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக இலங்கையின் துனித் வெல்லாலகே தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், சிறந்த வீராங்கனையாக இலங்கையின் ஹர்ஷிதா மாதவி தேர்வு செய்யப்பட்டார்.

    ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை இலங்கை அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அந்த மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
    • நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தேதி மற்றும் நடைபெறும் இடம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்-ஆஃப்ட் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 16 ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     


    முன்னதாக 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்ப்டன் மைதானத்திலும், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டி ஓவல் மைதானத்திலும் நடைபெற்றன. இவற்றில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.

    இரு பிரிவுகளில் முதல் இடத்தை பிடிக்கும் இரு அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இந்த இரு அணிகளைத் தொடர்ந்து நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

    • பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார்.
    • ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்ய உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா ஐசிசி தலைவராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். டிசம்பர் மாதத்தில் இருந்து ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

    பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார். தற்போது ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவராக இருக்கும் மெஹ்சின் நக்வி அடுத்த ஆசிய கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கான போட்டியில் அவர் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வருட இறுதியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது அடுத்த இரண்டு வருடத்திற்கு தலைவராக நியமிக்கப்படுவது உறுதியாகும்.

    பிசிசிஐ-யின் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதால், புதிய செயலாளராக அருண் ஜெட்லியின் மகன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    துபாய்:

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 847 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்திய வீரர் பும்ரா 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 788 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

    ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஸ்வின் 322 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அக்சர் படேல் 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் 6, 7, 8-வது இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிசிசிஐ தனது அதிகாரிகளுக்கு மாத சம்பளம் வழங்குவதில்லை.
    • 60 சதவீத பங்குகளை ஜெய் ஷா வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும், இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்று இருக்கிறார்.

    கிரெக் பார்கிலேவை தொடர்ந்து, வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு ரூ. 124 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

    கிரிக்கெட் கூட்டமைப்பு வருவாய் தவிர ஜெய் ஷா, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் இயங்கி வரும் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். மேலும், குசும் ஃபின்சர்வ் என்ற நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளை ஜெய் ஷா தன் வசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    மாத சம்பளத்தை பொருத்தவரை பிசிசிஐ தனது அதிகாரிகளுக்கு மாத சம்பளம் வழங்குவதில்லை. மாறாக தினசரி படி வழங்குகிறது. அதன்படி ஆலோசனை கூட்டங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் துவங்கி ரூ. 80 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

    "கிரிக்கெட்டை உலகம் முழுக்க கொண்டு சேர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் எடுப்பேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மிகமுக்கிய பதவியை ஏற்கும் தருவாயில், நீங்கள் வைத்துள்ள அதீத எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகவும், கிரிக்கெட் எனும் அழகிய போட்டிக்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்கிறேன்," என்று ஜெய் ஷா தெரிவித்து இருந்தார்.

    • ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம் என பிரகாஷ்ராஜ் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

    ஜெய்ஷாவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டாலான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர். இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல் ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

    • இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் 9வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

    துபாய்:

    டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் 881 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 859 புள்ளிகள் பெற்று நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 3-வது இடம் பெற்றுள்ளார்.

    இங்கிலாந்தின் ஹாரி புரூக் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

    3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் 9வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

    இந்தியாவின் ரோகித் சர்மா 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 7-வது இடத்திலும், விராட் கோலி 8-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஐசிசி-யின் தலைவராக ஜெய்ஷா டிசம்பர் 1-ந் தேதி பொறுப்பேற்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளராக இருந்த ஜெய்ஷா ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவராக ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

    35 வயதான அவர் இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். ஜெய்ஷா டிசம்பர் 1-ந்தேதி பொறுப்பை ஏற்கிறார்.

    ஜெய்ஷா ஐ.சி.சி. தலைவராகி விட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய செயலாளராக யார்? நியமிக்கப்பட இருக்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், மறைந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் மகனுமான ரோகன் ஜெட்லி பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.

    கிரிக்கெட் வாரிய பொருளாளரும், மராட்டிய பா.ஜனதா நிர்வாகியுமான ஆசிஷ் ஷிலார், காங்கிரஸ் எம்.பி.யும், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லா, ஐ.பி.எல். தலைவர் அருண்துமால், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அபிஷேக் டால்மியா, திலகர் கண்ணா உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர்.

    • நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டுசெல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன்.
    • உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசி-ன் வளர்ச்சிக்கு உதவும்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

    இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவுக்கு இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐசிசி-ன் இளம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு வாழ்த்துகள். நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டுசெல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன். உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசி-ன் வளர்ச்சிக்கு உதவும்.

    இவ்வாறு பாண்ட்யா கூறினார்.

    ×