என் மலர்

    நீங்கள் தேடியது "ஐசிசி"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2024, ஜூன் 4 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது.

    துபாய்:

    டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இப்போட்டியை இணைந்து நடத்துகின்றன.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது.

    மேற்கிந்திய தீவுகளில் ஆன்டிகுவா-பார்புடா, பார்படாஸ், கயானா, செயின் ட் லூசியா, செயின் ட் வின் சென் ட், டிரினிடாட்-டுபாகோ ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் அமெரிக்காவின் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 276 ரன்கள் சேர்த்தது.
    • தொடர்ந்து ஆடிய இந்தியா 281 ரன்கள் எடுத்து வென்றது.

    மொகாலி:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனர். ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும், லபுசேன் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 74 ரன், ருதுராஜ் 71 ரன், சூர்யகுமார் யாதவ் 50 ரன் மற்றும் கே எல் ராகுல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

    ஆட்டநாயகன் விருது முகமது ஷமிக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா உடனான வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

    இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சுப்மன் கில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் விராட் கோலி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் சுப்மன் கில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் விராட் கோலி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முக்கிய போட்டிக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்ததாக ரசிகர்கள் ஆதங்கம்
    • அனைத்து போட்டிகளுக்குமான பொது டிக்கெட் விற்பனை என பிசிசிஐ தகவல்

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான முதற்கட்ட டிக்கெட் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்றது.

    டிக்கெட் விற்பனை தொடங்கியதும் பெரும்பாலான போட்டிக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்தன. பெரும்பாலான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஆன்லைன் விற்பனை இணைய தளம் மீது குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் அனைத்து போட்டிக்கான 2-ம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் என பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

    இன்று முதல் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. https://tickets.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

    அரையிறுதி, இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்து உரிய நேரத்தில் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் பேரார்வம், பங்களிப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெறுகிறது. இந்த ஐந்து போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. அதேபோல் பெங்களூரு, டெல்லியில் நடைபெறும்  போட்டிகளுக்கான விக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
    • இந்தியாவின் சுப்மன் கில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.

    ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். 2-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்ஸி வான்டெர் டுசன் தொடருகிறார்.

    மூன்றாவது இடத்தில் இந்தியாவின் சுப்மன் கில் உள்ளார். நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் கில் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார். இதனால் 750 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் 3-வது இடம் பிடித்தார்.

    இந்திய வீரர் விராட் கோலி 10-வது இடத்தில் தொடருகிறார்.

    இஷான் கிஷன் பல்லேகலேயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் அடித்தார். இதன்மூலம் தரவரிசையில் 12 இடம் உயர்ந்து 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இதேபோல், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடமும், மிட்செல் ஸ்டார்க் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி முதல் இரண்டு ஆட்டங்களில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் 4 இடம் முன்னேறி 5-வது இடம் பிடித்துள்ளார். அதேசமயம் சக வீரர்களான ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 2 இடம் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இதேபோல், டி20 போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் 3-வது இடத்திலும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் 3 அல்லது 4 வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற வேண்டியது அவசியம்.
    • ஆசிய கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மா நின்று ஆடி கடைசி வரை நிற்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 17-ந் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 5-ந் தேதி தொடங்கி நவம்பர் 19-ந் தேதி முடிகிறது. இதற்காக அனைத்து அணியினரும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய அணி 2013-ம் வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் பல தொடர்களில் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் காரணம் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டாப் ஆர்டர்தான் இந்திய அணியின் பெரிய பலம். ஆனால் நாம் எப்படி செயல்படப்போகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கின்றது. நான் இதுவரை பார்த்த வரையில் பெரிய போட்டிகள், முக்கியமான போட்டிகளில், அல்லது ஐசிசி தொடர்களில் இந்தியாவின் டாப் ஆர்டர்தான் சொதப்புகின்றனர்.

    எனவே அதுதான் இந்திய அணி கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எனவே வரவிருக்கும் ஆசியக்கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட வேண்டும். ரெகுலராக இவர்கள் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டும். குறிப்பாக பெரிய போட்டிகளில் இவர்கள்தான் ஆட வேண்டும்.

    ஆகவே ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் 3 அல்லது 4 வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற வேண்டியது அவசியம். இவர்களிடத்தில் ஏகப்பட்ட அனுபவம் உள்ளது. ஷுப்மன் கில்லை அனைத்து வடிவ வீரர் ஆக்கியுள்ளோம். அவர் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க இதுதான் சிறந்த வாய்ப்பு எனவே அவரும் கிடைத்த வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த வேண்டும்.

    கில் மிக முக்கியமான வீரர். ஏனெனில் ரோகித் சர்மா தொடக்கத்தில் மெதுவாகவே ஆடுவார். பிறகுதான் விளாசத்தொடங்குவார். அந்தத் தருணங்களில் சுப்மன் கில்தான் ரன் ரேட்டைத் தக்கவைக்க வேண்டும். சில வேளைகளில் ரோகித் சர்மா தொடக்கத்திலிருந்தே அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுகிறார். இது ரிஸ்கான விஷயம்.

    ஆனால் ஆசிய கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மா நின்று ஆடி கடைசி வரை நிற்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆகவே ஷுப்மன் கில் மீது அதிக சுமை உள்ளது. அவர் ஆடும் விதம் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அவருக்கு இது முக்கியமான தொடர்களாகும்.

    இவ்வாறு சபா கரீம் கூறுகிறார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகக் கோப்பை போட்டி 10 மைதானங்களில் நடக்கிறது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.

    சென்னை:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலகக் கோப்பை போட்டியின் 48 ஆட்டங்களும் அகமதபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், புனே, லக்னோ, தர்மசாலா ஆகிய 10 மைதானங்களில் நடக்கிறது.

    உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) குழு ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வு செய்து இருந்தது.

    இதற்கிடையில் ஐ.சி.சி.யின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் உலகக் கோப்பை போட்டி நடைபெறும் மைதானங்களை தற்போது ஆய்வு செய்து வருகிறது.

    அதன்படி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐ.சி.சி. தலைமை ஆடுகள பராமரிப்பாளர் ஆன்டி அட்கின்சன் நேற்று ஆய்வு செய்தார். முழு வீச்சில் தயாராகி வரும் ஆடுகள தன்மை, அவுட் பீல்டு உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி கூறும்போது, "மிகப்பெரிய போட்டிக்கு முன்பு நடத்தப்படும் வழக்கமான ஆய்வு இதுவாகும். அனைத்து வசதிகளையும், நாடுகள் செய்த பணியையும் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்" என்றார்.

    உலகக் கோப்பை போட்டிக்காக ஐ.பி.எல். முடிந்த பிறகு சேப்பாக்கத்தில் எந்த போட்டியும் நடத்தப்படவில்லை.

    உலக கோப்பை போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கத்தில்தான் அக்டோபர் 8-ந்தேதி நடக்கிறது.

    நியூசிலாந்து-வங்காளதேசம் (அக்டோபர் 13), நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 18), பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் (அக்டோபர் 23), பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா (அக்டோபர் 27) போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.
    • 5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இருந்த ஃபகார் ஜமான் 2 இடங்கள் பின் தங்கி 5-வது இடத்தை பிடித்தார்.

    5-வது இடத்தில் இருந்த சுப்மன்கில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து 9-வது இடத்தில் விராட் கோலியும் 11-வது இடத்தில் ரோகித் சர்மாவும் நீடிக்கிறார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் நீடிக்கிறார்.

    டி20-யை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரேஒரு இந்தியர் மட்டுமே டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் 143 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது.
    • உலக கோப்பை கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களின் தேதி, நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கிடைக்கும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ம் தேதி விற்கப்படும்.

    ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவுசெய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 லீக் போட்டிக்கான தேதியை மாற்றி புதிய அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    அக்டோபர் 15ம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து போட்டி அக்டோபர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

    ஐதராபாத்தில் இலங்கை- பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 12 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. லக்னோவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு பதில் 12ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதேபோல் சென்னையில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வங்காளதேசம்-நியூசிலாந்து ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுளள்து. இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

    லீக் சுற்றின் கடைசியில் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி காலை 10:30 மணிக்கு ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணி புனேவில் மோதுகிறது. பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் விளையாடுகின்றன.

    நெதர்லாந்திற்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் 11ம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போட்டி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க ஆட்டம் மற்றும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print