என் மலர்
நீங்கள் தேடியது "ஆரோன் பிஞ்ச்"
- அவரை போன்ற வீரருக்கு ரூ.23¾ கோடி என்பது ரொம்பவே அதிகம்.
- 2024-ம் ஆண்டு தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக இருந்தார்.
மும்பை:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அளித்த ஒரு பேட்டியில், 'ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யரை ரூ.23¾ கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
அவரை போன்ற வீரருக்கு இவ்வளவு தொகை என்பது ரொம்பவே அதிகம். மிடில் ஆர்டரில் அவர் வெவ்வேறு வரிசையில் இறக்கப்படுகிறார். அத்துடன் பந்து வீச்சில் அவரை பயன்படுத்துவதில்லை. 2021-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராக இருந்தார்.
2024-ம் ஆண்டு தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக இருந்தார். ஆனால் இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் (11 ஆட்டத்தில் 142 ரன்கள் எடுத்தார்) அவரது சீரற்ற பேட்டிங் வரிசை மற்றும் மெகா தொகைக்கு ஏலம் போனதால் விழுந்த முத்திரை அவருக்கு சரியாக பொருந்தவில்லை.
எனவே அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து கொல்கத்தா அணி பரிசீலிக்க வேண்டும். இதனால் அணியின் இருப்புத் தொகையும் அதிகமாகும். இப்போது அவரை விடுவித்து விட்டு ஏலத்தில் ஓரளவு நல்ல தொகைக்கு அவரை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்' என்றார்.
- சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் கிரகி்கெட்டின் சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே காண்பித்து விட்டார்.
- ஆகவே, ஒருநாள் கிரிக்கெட்டிலும் எந்த மாறுபாடும் இருக்காது.
இந்திய ஒருநாள் அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஆதரித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச்.
சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-
சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் கிரகி்கெட்டின் சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே காண்பித்து விட்டார். ஆகவே, ஒருநாள் கிரிக்கெட்டிலும் எந்த மாறுபாடும் இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான தொடர் மிகச் சிறந்த தொடராக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவான் என நினைக்கிறேன். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-1 எனக் கைப்பற்றும். இருந்தாலும் இதில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இந்தியா சிறந்த அணி. இந்த தொடரை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்றார்.
- தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும்.
- நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன்.
சிட்னி:
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 7-ந்தேதி லண்டன் ஓவரில் தொடங்குகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விராட் கோலியை விரைவில் அவுட் ஆக்குவது முக்கியமானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் 4-வது இடத்தில் பேட்டிங் செய்கிறார்கள். எனவே அவர்களை முடிந்த வரை சீக்கிரம் அவுட் ஆக்குவது அந்தந்த அணிகளுக்கு முக்கியத்துவமாக இருக்கும்.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் அவர்களை புதிய பந்தில் ஆட வைப்பது முக்கியமானதாக இருக்கும். நான் எப்போதும் ஸ்டீவன் சுமித் பக்கம் இருப்பேன். அவரது சாதனை சிறப்பானது என்று நினைக்கிறேன். ஆனால் இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்.
கடந்த 3 தொடர்களிலும் ஆஸ்திரேலியாவைவிட இந்தியா சிறப்பாக விளையாடி உள்ளது. எந்த இடத்தில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயமாக இருக்காது. இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் ஆன்-பீல்ட் நடுவர்கள் இருவரும் சேர்ந்து குற்றச்சாட்டை சுமத்தியதாக ஐசிசி அறிக்கை கூறுகிறது.
- ஆபாசமாக பேசியும் ஆரோன் பிஞ்ச் அபராதத்தில் இருந்து தப்பித்தார்.
டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஸ்டம்ப் மைக்ரோஃபோன் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து இன்னிங்சின் ஒன்பதாவது ஓவரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அந்த ஓவரின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லருக்கு பேட்டில் பந்து ஊரசியது போல இருந்தது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டனர். அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நடுவரிடம் ஆரோன் பிஞ்ச் முறையிட்டார். அப்போது ஆபாச வார்த்தையில் பேசினார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது.
நடுவரை ஆபாசமாக திட்டிய ஆரோன் பிஞ்ச்#AaronFinch #ICC #maalaimalar pic.twitter.com/N7kWCHLCcZ
— Maalai Malar தமிழ் (@maalaimalar) October 11, 2022
ஐசிசி நடத்தை விதி 2.3-ஐ பிஞ்ச் மீறியதாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும் அவர் அபராதத்தில் இருந்து தப்பித்தார். ஏனெனில் கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் குற்றமாகும். ஆனால் ஐசிசி பிஞ்சின் ஒழுங்குமுறை மீறியதாக ஒரு குறைபாடு புள்ளியை சேர்த்துள்ளது.
மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் ஆன்-பீல்ட் நடுவர்கள் இருவரும் சேர்ந்து குற்றச்சாட்டை சுமத்தியதாக ஐசிசி அறிக்கை கூறுகிறது.
- நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம்.
- இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்று போட்டிக்கு முன்பாக பெய்த பலத்த மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. அதனால் போட்டியானது 8 ஓவர்கள் வரை மட்டுமே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணியானது மிகச் சிறப்பாக பந்துவீசி 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தது.
இதனையடுத்து 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் கூறுகையில் :
நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம். ஆனால் கூடுதலாக மூன்று ஓவர் அதிகமாக வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ரோகித் சர்மா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார்.
அதேபோன்று இந்திய அணியின் பவுலரான அக்சர் பட்டேல் வீசிய இரண்டு ஓவர்கள் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தின. அவருடைய பந்துவீச்சு எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. எங்களது அணி சார்பாக மேத்யூ வேட் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று ஆடம் ஜாம்பா எங்கள் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.
இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.
- ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் போட்டி அவரது கடைசி போட்டி ஆகும்.
சிட்னி:
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வுபெற உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
2013-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆரோன் பிஞ்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,402 ரன்கள் எடுத்துள்ளார்.
துபாய்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா - வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டி தொடரில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. 2-வதாக பந்து வீசிய பல அணிகள் பனிபொழிவு சிக்கலை எதிர்கொண்டு தோல்வி அடைந்தன.
பெரும்பாலான ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இதனால் இன்றைய இறுதிப் போட்டியிலும் சாம்பியன் அணியை டாஸ் முடிவு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன்பிஞ்ச் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பையில் சாம்பியன் அணியை டாஸ் முடிவு செய்யாது. டாசால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளலாம். உலக கோப்பையில் வெல்ல வேண்டுமானால் முதலில் பேட்டிங் செய்தும் ஜெயிக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிராக டாசில் தோற்கவேண்டும் என எண்ணினேன். அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று கருதினேன்.
டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய மாட்டோம். அதே சமயம் முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை என இருந்தேன். இதேதான் இறுதிப்போட்டியிலும் எனது நிலையாகும்.
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சென்னை அணி கோப்பையை வென்றதை பார்த்தோம். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன் எடுத்து வெற்றி பெற்றது.
அதிக ரன்களை குவித்தால் எதிரணி பேட்டிங் செய்யும்போது தவறுகளை செய்ய தூண்டமுடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டவே அணிகள் விருப்பப்படும். இதில் சில ஆபத்துகளும் உண்டு.
எதிரணி அதிக ரன்களை குவித்துவிட்டால் இலக்கை எடுப்பது கடினம். நியூசிலாந்தை வெல்வது சவாலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, நாங்கள் எங்கள் திட்டப்படி விளையாடுவோம். வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களின் திறமை வெளிப்படுத்துவார்கள் என்றார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டதில் அந்த அணி வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகரான ஜஸ்டின் பீபரை 8 வயது சிறுமிகள் சுற்று வருவதைப் போல், ரிக்கி பாண்டிங்கை ஆஸ்திரேலிய வீரர்கள் சுற்றி வருகின்றனர் என பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களும் ரிக்கி பாண்டியால் ஈர்க்கப்பட வேண்டும் விரும்புகின்றனர். எப்படியாவது அவரது பார்மை தம் மீது படவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது பீபரை 8 வயது குழந்தைகள் சுற்று வருவதுபோல் உள்ளது. இது விசித்திரமாக உள்ளது. இருந்தாலும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
தொடர் முடிந்து ஆஸ்திரேலியா செல்லும்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் எம்எஸ் டோனி ஆகியோரின் ஜெர்சியை வாங்கிச் சென்றார்.

இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இரண்டு ஜெர்சிகளையும் காண்பித்தபடி, ‘‘எல்லா காலங்களிலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களான (ALL Time Greats) இருவருக்கும் மரியாதை அளிப்பது மிகப்பெரியது’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று பகல்- இரவாக நடந்தது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 115 ரன்னும் (11 பவுண்டரி) கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன்னும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிக் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
முதல் ஆட்டத்திலும் 8 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது போட்டி வருகிற 27-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது. #PAKvAUS
ஸ்மித், வார்னர் மீதான தடைக்காமல் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருவரும் விளையாட வாய்ப்புள்ளது. அவர் இருவரும் அணியில் இடம்பிடித்தால், வார்னர் தொடக்க வீரராக களம் இறங்குவார். ஸ்மித் 3-வது வீரராக களம் இறங்குவார்.
இருவரும் களம் இறங்கும்போது ஆரோன் பிஞ்ச் எந்த இடத்தில் களம் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இருவருக்காவும் கீழ்வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்யத் தயார் என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிஞ்ச் கூறுகையில் ‘‘என்னை 6-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய சொன்னால் கூட, அதில் களம் இறங்குவேன். டாப் மூன்று அல்லது நான்கு என்பது முக்கியமல்ல’’ என்றார்.






