என் மலர்
நீங்கள் தேடியது "tag 136067"
- பிடித்தவர்களை தேர்வு செய்து வாழ்த்து அட்டைகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
- பள்ளி நிர்வாகத்தினர் நெகிழ்ச்சி.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடம் அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில், முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும் திட்டத்தை சில பள்ளிகள் செயல்படுத்தின. செனாடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து வாழ்த்து அட்டைகள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு வரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பினர். இந்த பள்ளியில் 4-ம் வகுப்பு படிப்பவர் ஸ்ரேயா சபின். ஆரம்மைல் பகுதியை சேர்ந்த சபின்-அஞ்சலி தம்பதியினரின் மகளான இவர், வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்திக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வாழ்த்து அட்டை அனுப்பினார்.
அதன்பிறகு அவர் அதனை மறந்து விட்டார். இந்த நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு ஸ்ரேயா பெயருக்கு அவர் படிக்கும் பள்ளிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை பிரியங்கா காந்தி எம்.பி. தனது கைப்பட எழுதி அனுப்பி இருந்தார்.
ஸ்ரேயா, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதில் அவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிஜூ, அந்த கடிதத்தை மாணவ-மாணவிகள் மத்தியில் ஸ்ரேயாவிடம் ஒப்படைத்தார். மாணவியின் வாழ்த்து கடிதத்துக்கு மதிப்பு அளித்து பிரியங்கா காந்தி பதில் கடிதம் அனுப்பிய சம்பவம் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பலரை நெகிழ்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
- நிர்வாணமாக்கி வலுக்கட்டாயமாக வீடியோ எடுக்க முயற்சி
- அதிர்ந்து போன மாணவியின் தந்தை போலீசில் புகார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்கள்-மாணவிகள் இணைந்து படிக்கும் இந்த பள்ளியில் பாலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பயின்று வருகின்றனர்.
அந்த பள்ளியில் பாலா பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி கடந்த 10-ந்தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருந்தார். பள்ளியின் ஓய்வு நேரத்தில் அந்த மாணவி வகுப்பறையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரது வகுப்பில் படித்து வரும் 7 மாணவர்கள், மாணவியின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி உள்ளனர். அது மட்டுமின்றி மாணவியை தங்களது செல்போன்களில் நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.
மாணவர்களின் மிரட்டலுக்கு பயந்து அந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனது பெற்றோர் என யாரிடமும் அந்த மாணவி கூறவில்லை. இந்தநிலையில் வகுப்பறையில் வைத்து எடுத்த மாணவியின் நிர்வாண வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.
இதையறிந்த அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார். இதனால் அவர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த படி நேற்று முன்தினம் (16-ந்தேதி) பள்ளிக்கு மீண்டும் சென்றார்.
அப்போது அவரை ஏற்கனவே நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மாணவர்கள், மதிய இடைவேளை நேரத்தில் மாணவியை மீண்டும் நிர்வாணமாக்கி வலுக்கட்டாயமாக வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவி அந்த மாணவர்களின் பிடியில் இருந்து தப்பி வகுப்பறையில் இருந்து வெளியே ஓடினார். பின்பு அவர் கதறி கூச்சலிட்டபடி ஆசிரியர்கள் ஓய்வறைக்கு ஓடிச்சென்றார். அங்கிருந்த ஆசிரியர்கள் என்ன நடந்தது? என்று விசாரித்தனர்.
அப்போது வகுப்பறையில் வைத்து மாணவர்கள் தன்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டதாகவும், தற்போது மீண்டும் நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும் மாணவி தெரிவித்தார். அதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியை சமாதானம் செய்தனர்.
பின்பு அதுபற்றி பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோரும் அறிந்தனர். பள்ளியின் வகுப்பறையில் தங்களின் மகளுக்கு நேர்ந்த இந்த கொடூர செயலால் அதிர்ந்து போன மாணவியின் தந்தை, அதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தனது மகளுக்கு இந்த சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டிய அவர், மாணவி யிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப் படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரை நிர்வாண வீடியோ எடுத்ததாக கூறப்படும் 7 மாணவர்கள் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.
மேலும் மாணவி-மாணவர்களின் பெற்றோர், பள்ளி ஆசிரி யர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளும் விசா ரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கேரள மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டி ருக்கிறார்.
மேலும் பாதிப்புக்குள்ளான மாணவியின் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாணவி படித்த பள்ளியின் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 16-ந்தேதி புகார் அளித்தவுடன் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம். மேலும் உடனடியாக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுத்தோம்.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பள்ளியின் நெறிமுறைக்குழு முடிவு செய்தது. மாணவி விவகாரம் குறித்து சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் கூறியிருக்கிறது.
பள்ளி வகுப்பறையில் 9-ம் வகுப்பு மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர்களே நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சமூக வலைதளங் களில் பரப்பிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர்.
- ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 11-ந் தேதி விடுதியில் தங்கி படிக்கும் வடமாநில மாணவி ஒருவர், தனது சக கல்லூரி நண்பருடன் நடந்து சென்றார்.
அப்போது மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர். இருவரும் மாறி மாறி வீடியோ எடுத்தபோது மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் அந்த கும்பல் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதில் படுகாயம் அடைந்த மாணவி, கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவி புகார் அளிக்க முன்வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி மற்றும் மாணவரிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டது தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் மற்றும் அவரது உறவினர்கள் என தெரியவந்தது.
தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவி மற்றும் மாணவரை ஆபாசமாக திட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக பதிவாளர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
காலாப்பட்டு போலீசார் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்குள் அத்துமீறி நுழைதல், மாணவர்களை ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது, மேட்டுப்பாளையம் தனியார் கம்பெனியில் பணியாற்றும் அரும்பார்த்தபுரம் ஷாம் (வயது19), வில்லியனூர் திருக்காஞ்சி சாலையை சேர்ந்த அரசு கலை கல்லூரி மாணவர் விமல்(19) மற்றும் 2 சிறுவர்கள் என தெரியவந்தது.
ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் 17 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்தனர். விசாரணை நடத்தி அவர்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- விசாரணை குறித்து சிறப்பு புலனாய்வு குழுவோ, அதிகாரிகளோ இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
- ஊடகங்கள், தனிநபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் ஊகங்களின் அடிப்படையிலான கருத்துகளை வெளியிட வேண்டாம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை உயர்த்திமன்றத்தின் உத்தரவுபடி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா இகாய தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் / முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி / பிரசுரித்து வருகின்றன. குறிப்பாக எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்", சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரியிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்", "திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்" என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும் இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இவ்லாதவையாகும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக்கூடும்.
இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன் புலன் விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வாலிபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அத்துமீறியுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் சென்னையில் மேலும் ஒரு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
தாராபுரத்தை சேர்ந்த 27 வயதான மாணவி கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
கடந்த 1-ந்தேதி அன்று நள்ளிரவு 1 மணி அளவில் மாணவி தனது தோழிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்தார். மகப்பேறு வார்டு வளாகத்தின் உள்ளே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அத்துமீறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரின் பெயர் முகமது ஆதாம் என்பது தெரிய வந்தது. கடலூர் மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்த அவர் மது போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
என்ஜினீயரிங் மாணவியை தொடர்ந்து மருத்துவ மாணவியிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர்கள் மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது.
- அமைச்சர் ரகுபதி இந்த விஷயத்தில் புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை.
- மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில பா.ஜ.க. நிர்வாக அமைப்பு தேர்தல் சம்பந்தமாக புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அகில இந்திய மகளிர் அணி தலைவியும் தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு ஆதரவாக அரசு இருக்கவேண்டும். உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்ததன் மூலம் நியாயமான விசாரணை நடக்கவில்லை என நிருபணமாகிறது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த விஷயத்தில் புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எங்கு பெண்களுக்கு எதிரான கொடுமை நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது.
ஆனால் தமிழகத்தில் அதுபோல் இல்லை. எப்.ஐ.ஆர். வெளியே வந்துள்ளது. நாட்டில் எங்கு பெண்களுக்கு பாதிப்பு நிகழ்ந்தாலும் பா.ஜ.க. குரல் கொடுக்கிறது. சட்டரீதியான பாதுகாப்பு தருகிறோம். பா.ஜ.க. ஆட்சிபுரியும் மாநிலத்தில் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிரான செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
பெண்கள் தொடர்பான வழக்குகளில் அரசும், சமூகமும், மீடியாவும் பொறுப்புணர்வோடு அணுக வேண்டும். சமூக வலைத்தளங்களில் பெண்களை யார் விமர்சித்தாலும் தவறுதான்.
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை வழக்கமான நடவடிக்கைதான். அவர்கள் ஆதாரத்தை வைத்துதான் சோதனையிடுவார்கள்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
- அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.
- என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன்.
திருச்சி:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் தமாகவின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் 2025-ம் ஆண்டில் தொடர் களப்பணிகள் நடைபெறும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான். மதுபான கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதை செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக் கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
தி.மு.க. அரசின் அவலங்களை கண்டித்து போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை கூட பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன். நடவடிக்கை எடுப்பேன். ஆதரவாக இருக்க மாட்டேன்.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. "ஒத்த கருத்து" என்பது தேர்தலில் வெற்றி பெறுவது தான். புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும்.
பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிக்கு தாமதமாகச் சென்ற மாணவியிடம் ஆசிரியர்கள் காரணம் கேட்டுள்ளனர்.
- ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர்.
பேரூர்:
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரில் உள்ள பகுதியில் வசிப்பவர் ஜெபராஜ் (வயது 39). ஆட்டோ டிரைவர்.
இவர் தினந்தோறும் காலை அந்த பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சிலரை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை பணியாக கொண்டு இருந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரையும் அவர் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் 7-ம் வகுப்பு மாணவியை பள்ளியில் விடுவதற்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றார். ஆனால் பள்ளிக்கு அழைத்து செல்லாமல் மாணவியை தனது வீட்டிற்கு அவர் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சத்தம் போட்டு அழுதுள்ளார். இதையடுத்து மாணவியை சமாதானப்படுத்தி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி பள்ளியில் கொண்டு இறக்கி விட்டுச் சென்றார்.
பள்ளிக்கு தாமதமாகச் சென்ற மாணவியிடம் ஆசிரியர்கள் காரணம் கேட்டுள்ளனர். அப்போது ஆட்டோ டிரைவர் தன்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றதாக கூறி மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
உடனே ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர். அவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் ஆட்டோடிரைவர் ஜெபராஜை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெபராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- மாணவியிடம் ரூ. 500 கொடுத்து மோட்டார்சைக்கிளில் வருமாறு கூறியுள்ளார்.
- உதவி ஜெயிலர் அடி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலாராக குருசாமி பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு விசாரணை கைதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் மூலம் அவரது மகள் மற்றும் பேத்தியுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறைவாசியின் பேத்தியை தான் வசிக்கும் இடத்திற்கு தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை தனது குடும்பத்தாரிடம் மாணவி கூறியுள்ளார். உடனே மாணவியை அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்தார் மறைவாக நின்று நோட்டமிட்டுள்ளனர்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த உதவி ஜெயிலர், மாணவியிடம் ரூ. 500 கொடுத்து மோட்டார்சைக்கிளில் வருமாறு கூறியுள்ளார். உடனே அந்த மாணவி கூச்சலிட்டுள்ளார்.
மாணவி கூச்சலிட்டத்தை அடுத்து அருகிலிருந்த மாணவியின் சித்தி உதவி ஜெயிலருக்கு தர்ம அடி கொடுத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் குருசாமி மற்றும் மாணவியின் குடும்பத்தாரை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதவி ஜெயிலர் அடி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தாவரகரை கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன் (வயது35) விவசாயி. இருவடைய மகள் திவ்யாஸ்ரீ (10). இந்த சிறுமி தாவரகரை அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை திவ்யாஸ்ரீ கழிவறை அருகே சென்றுள்ளார். அப்போது கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்டுள்ளார். அப்போது திவ்யாஸ்ரீ உடலில் திடீரென்று மின்சாரம் பாய்ந்து சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே இரவு நேரங்களில் யானை வராமல் இருக்க கிருஷ்ணன் மின் விளக்கு அமைத்து இருந்தார். அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்துள்ளது. அதை அறியாமல் திவ்யாஸ்ரீ தொட்டதில் உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
- மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
- ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் அரசு விடுதியில் தங்கி படித்து வரும் 10 வகுப்பு மாணவி தொடர்ந்து 15 முறை ஏற்பட்ட எலிக் கடி காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்மம், தானவாய்குடத்தில் பி.சி. நல விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லக்ஷ்மி பவானி கீர்த்தி என்ற மாணவியை, இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து எலி கடித்ததால் லட்சுமிக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் புவ்வாடா அஜய் குமாரின் தலையீட்டுக்கு பின்னர், மாணவி தற்போது மம்தா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
A Xth class student residing at BC Welfare Residential Hostel in #Khammam #Telangana reportedly #BittenByRats 15 times between March & November, and administered anti-rabies vaccine, has been left paralysed in right leg & hand; other students also report rat bites #BeyondShocking pic.twitter.com/dt3qwJQ99b
— Uma Sudhir (@umasudhir) December 18, 2024
லட்சுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடைந்து வரும் நிலையில், நரம்பியல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விடுதிகளில் நிலை குறித்து ஆளும் காங்கிரஸ் அரசை பிஆர்எஸ் கட்சி விமர்சித்துள்ளது.
- தினமும் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
- மாணவி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது தோழி உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் 21 வயதுடைய மன வளர்ச்சி குன்றிய மாணவி ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தை சரக்கு வாகன டிரைவர் ஆவார். இவரது தாயார் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார். அயனாவரம் பகுதியை சேர்ந்த இவர் தினமும் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த மாதம் மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்களும், தேவையில்லாத அழைப்புகளும் வந்துள்ளதை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்து, அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் அவர், தனது மகளுக்கு 'செமஸ்டர்' தேர்வு நடந்ததால் விசாரணை தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அன்று மாணவி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். தந்தை விசாரித்த போது, 'என்னை கல்லூரி வாசலில் இருந்து சிலர் வெளியே அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர்' என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன அவர், அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், மாணவியை கல்லூரி அருகில் இருந்து அழைத்து சென்றிருப்பதால் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ஆலோசனை வழங்கினார்கள். அதன்படி அவரும் புகார் அளித்தார்.
சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், அந்த மாணவிடம் விசாரித்த போது, அவர் தனது கல்லூரி தோழி மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமான நரேஷ், சுரேஷ், சீனு ஆகிய 3 பேர் அவரை யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும், மேலும் திருப்பூரை சேர்ந்த கவி, கோயம்பேட்டை சேர்ந்த ரோஷன், அம்பத்தூரை சேர்ந்த பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி ஆகியோர் 'ஸ்னாப் ஸாட்' மூலம் பழகி அவர்களும் என்னை இந்த தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டனர் என்றும் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 8 பேர் மீது பெண்ணை பாதுகாவலரின் அனுமதியின்றி அழைத்து செல்லுதல், அனுமதியின்றி தொடுதல், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அந்த மாணவியின் தோழி மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கில் சிக்கியவர்கள் கைதான பின்னர், இந்த விவகாரத்தில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை அயனாவரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மன வளர்ச்சி குன்றிய சிறுமி 17 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை போன்று இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.