search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்ற"

    • மண்எண்ணை போன்ற பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    • டத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான ரேசன் அரிசி, மானிய மண்எண்ணை போன்ற பொருட்கள் கேர ளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் கடத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன. இதனால் பல இடங்களில் விபத்துகள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அதங் கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் களியக்கா விளை பகுதியில் இருந்து பொருட்கள் வாங்கி விட்டு குழித்துறையை நோக்கி வந்து கொண்டிருந்தார். பைக் கல்லுகட்டி பகுதியில் வந்தபோது எதிரே வேக மாக வந்த சொகுசு கார் ஒன்று பைக் மீது பயங்கர மாக மோதியது. இதில் மணிகண்டன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.

    படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக ஆசா ரிப்பள்ளம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் காரை அங்கிருந்து எடுத்து செல்ல முயன்றுள் ளார். ஆனால் அங்கு கூடிய பொதுமக்கள் காரை எடுத்து செல்ல அனு மதிக்காமல் தடுத்து நிறுத்தி யுள்ளனார்.

    மேலும் விபத்து குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்தவுடன் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்தபோது அதில் சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரி யவந்தது. மேலும் அரிசியுடன் நின்றிருந்த சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் காரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    பின்னர் வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த னர். மேலும் விபத்து நடத்தி விட்டு தப்பி ஓடிய கடத்தல் வாகனத்தின் ஓட்டுநர் யார்? வாகனத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி தினமும் டியூசனுக்கு சென்று வருவார். அவ்வாறு செல்லும் அந்த மாணவியை வாலிபர் ஒருவர் தினமும் பின் தொடர்ந்து சென்று தாலலை கொடுத்தப்படி இருந்துள்ளார். நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். பின்பு டியூசன் முடிந்ததும் இரவில் பீச் ராடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மாணவிக்கு ஏற்கனவே தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அங்கு வந்தார்.

    அவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை செய் துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறினார்.இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்பு அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிப ரிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க விரும்பவில்லை.

    இதனால் அந்த வாலிபர் மீது போலீசாரால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுபோன்ற செயலில் ஈடுப டக்கூடாது என்று அந்த வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர். டியூசனுக்கு சென்று வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலி பருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பீச் ரோடு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    • சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மன்செட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (38), செவ்வாய்ப்பேட்டையில் கற்பூரம் மொத்த வியாபா ரம் செய்து வருகிறார்.
    • அப்போது கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப் பேட்டை நரசிம்மன்செட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (38), செவ்வாய்ப்பேட்டையில் கற்பூரம் மொத்த வியாபா ரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி மது அருந்து வதால் அவரது மனைவி 2 குழந்தைகளுடன் துறையூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநி லையில் சம்பவத்தன்று இரவு மது போதையில் சிவக்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த நகை களை யாரோ மர்ம நபர்கள் இரவில் வீடு புகுந்து கொள்ளையடித்ததை அறிந்த அவர் அன்னதா னப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

    • சத்தியமங்கலம் அருகே ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.
    • மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள ஓட்டக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு வளர்த்து வருகிறார்.

    நேற்று மாலை ஓட்டக்குட்டை பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது மரத்தில் கட்டப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியை சுமதி அருகில் உள்ள ஒரு தொழுவத்தில் கட்டியிருந்தார்.

    சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் சென்ற போது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை காணவில்லை. அப்போது ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.

    எனவே சிறுத்தை தான் ஆட்டுக் குட்டியை உயிரோடு இழுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுமதி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து கால் தடயங்களை பார்த்த போது அது சிறுத்தையின் கால் தடம் தான் என்று உறுதிசெய்தனர்.

    மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர். எனவே விரைவில் கூண்டு வைக்கப்படுகிறது.

    • அந்தியூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
    • இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அட்டகல்லூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். கூலி தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (21). குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக காயத்ரி வீட்டிலிருந்து அந்தியூர் பஸ் நிலையத்திற்கு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்து அங்கிருந்து பஸ் மூலம் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி சம்பவத்தன்று காயத்ரியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அந்தியூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் காயத்ரி கல்லூரி செல்வதற்காக பஸ்சில் ஏறி சென்று உள்ளார்.

    அதன் பின்னர் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை மாயமான தனது மகளை மீட்டுத்தருமாறு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் அங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    ×