search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே ரேசன் அரிசி கடத்தி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து
    X

    களியக்காவிளை அருகே ரேசன் அரிசி கடத்தி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து

    • மண்எண்ணை போன்ற பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    • டத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவிலான ரேசன் அரிசி, மானிய மண்எண்ணை போன்ற பொருட்கள் கேர ளாவுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் கடத்தல் வாகனங்கள் சாலை வழியாக அதிவேகமாக செல்கின்றன. இதனால் பல இடங்களில் விபத்துகள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அதங் கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் களியக்கா விளை பகுதியில் இருந்து பொருட்கள் வாங்கி விட்டு குழித்துறையை நோக்கி வந்து கொண்டிருந்தார். பைக் கல்லுகட்டி பகுதியில் வந்தபோது எதிரே வேக மாக வந்த சொகுசு கார் ஒன்று பைக் மீது பயங்கர மாக மோதியது. இதில் மணிகண்டன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாய மடைந்தார்.

    படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக ஆசா ரிப்பள்ளம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் காரை அங்கிருந்து எடுத்து செல்ல முயன்றுள் ளார். ஆனால் அங்கு கூடிய பொதுமக்கள் காரை எடுத்து செல்ல அனு மதிக்காமல் தடுத்து நிறுத்தி யுள்ளனார்.

    மேலும் விபத்து குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்தவுடன் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்தபோது அதில் சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரி யவந்தது. மேலும் அரிசியுடன் நின்றிருந்த சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் காரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    பின்னர் வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த னர். மேலும் விபத்து நடத்தி விட்டு தப்பி ஓடிய கடத்தல் வாகனத்தின் ஓட்டுநர் யார்? வாகனத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×