என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவருடன்"

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
    • தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி மெர்லின் டயானா (வயது 36). இவர் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    தற்போது கல்லூரி விடு முறை என்பதால், மெர்லின் டயானா ஊருக்கு வந்தி ருந்தார். நேற்று இரவு அவர், கணவருடன் மோட் டார் சைக்கிளில் மார்த் தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் அங்கிருந்து கணவன்-மனைவி இருவரும் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப் பட்டனர். மார்த்தாண் டம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலை யில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்தவர்கள், திடீரென மெர்லின் டயானா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்ச லிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதற்கிடையில் மெர்லின் டயானாவின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி வர்த்தக நிறு வனத்தினர் திரண்டனர். அவர்கள், மர்மமனிதர்கள் சென்ற பாதையில் வாகனங்களில் சென்று பார்த்தனர்.

    ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 16 பவுன் நகை பறிபோனதாக போலீ சாரிடம் மெர்லின் டயானா புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் நகரில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன்-மனைவி2 பேரும் மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.
    • அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையம் பகுதியை சேர்ந்த வர் சங்கரன். (வயது 72). விவசாயி. இவரது மனைவி ருக்மணி (65).

    இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் காமராஜ் நகர் பிரிவு அருகே வந்தனர்.

    அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது. இதில் கணவன்- மனைவி இரு வரும் தூக்கி வீசப்பட்டு படு காயம் அடைந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருக்மணி பரிதாபமாக இறந்தார்.

    சங்கரன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அத்தாணி பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×