search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A woman"

    • வீட்டில் உள்ள ஒரு அறையில் மைதிலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு கணேச புரம், சிங்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மைதிலி (25). மைதிலி கடந்த 2016-ம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த கணேசன் என்ப வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து க்கொண்டு மைதிலி தாய் வீட்டுக்கு வருவது வழக்கம். பின்னர் கணேசன் சமாதா னப்படுத்தி மனைவியை உடன் அழைத்துச்செல்வார்.

    இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக கணவரை பிரிந்து மைதிலி தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    மைதிலிக்கு சின்ன வயதில் இருந்தே கோபப்பட்டால் தலையை சுவற்றில் முட்டி கொள்வது வழக்கம். இதனால் அவருக்கு தலைவலி இருந்து உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மைதிலிக்கு மீண்டும் தலைவலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் உறவினர் ஒருவ ருக்கு போன் செய்து மைதிலியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு அவரது தாய் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    பின்னர் அவரது உறவினர் மைதிலி வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் மைதிலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சசிகலா தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் சின்னமுத்தூரைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவரது கணவர் ரத்தினசாமி (51). இவர்களது மகள் சசிகலா (26).

    இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வெங்கமேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    சசிகலா காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது பெற்றோர் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அதன் பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து, சசிகலாவின் தாய் தங்கமணி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இறங்கி பவானி ஆற்றில் பரிசல் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார்.
    • பரிசல்லானது திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து ஆரோக்கிய மேரியை அமுக்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசூர் அடுத்த மாக்கினாகோம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (42). இவரது கணவர் அந்தோணிசாமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    அந்தோணிசாமி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆரோக்கியமேரி தினமும் பவானி ஆற்றில் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.

    அதேப்போல் நேற்றும் மீன்பிடிக்க தனது தங்கை மல்லிகாவுடன் சென்றார். இதற்காக ஆரோக்கிய மேரி பரிசலை எடுத்துக்கொண்டு சென்றார்.

    சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இறங்கி பவானி ஆற்றில் பரிசல் போட்டு தங்கையுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார்.

    பின்னர் மாலை அரியப்பம்பாளையம் அம்மன் கோவில் அருகே பவானி ஆற்று தடுப்பு அணையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ஆரோக்கிய மேரி ஆற்றின் நடுவில் உள்ள தடுப்பணை சுவரைத் தாண்டி செல்ல பரிசலை தூக்கி போட்டு அதில் ஏற முயன்றார்.

    அப்போது பரிசல்லானது திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து ஆரோக்கிய மேரியை அமுக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை மல்லிகா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆரோக்கிய மேரியை தூக்கி மணல்மேட்டில் படுக்க வைத்து பார்த்த போது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.

    உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே ஆரோக்கிய மேரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன்-மனைவி2 பேரும் மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர்.
    • அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையம் பகுதியை சேர்ந்த வர் சங்கரன். (வயது 72). விவசாயி. இவரது மனைவி ருக்மணி (65).

    இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மொபட்டில் கோபி செட்டிபாளையம்-கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் காமராஜ் நகர் பிரிவு அருகே வந்தனர்.

    அப்போது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மொபட் மீது எதிர்பாரா தவிதமாக மோதியது. இதில் கணவன்- மனைவி இரு வரும் தூக்கி வீசப்பட்டு படு காயம் அடைந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ருக்மணி பரிதாபமாக இறந்தார்.

    சங்கரன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அத்தாணி பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீ பிடித்தது.
    • இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சென்னிமலை:

    புதுச்சேரியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் அனிதா (31).இவர்கள் 2 பேரும் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட னர்.

    அனிதாவுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானது. முதல் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அவர் மூலம் அனிதாவுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஜெய க்குமார் மூலம் அனிதாவுக்கு 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    ஜெயக்குமாரும், அனிதாவும் பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இதையடுத்து கடந்த 15 நாட்களாக சென்னிமலை அடிவார பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு அனிதாவின் மகள் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு அனைவரும் தூங்கி விட்டனர். இதையடுத்து அதிகாலையில் சமையல் செய்வதற்காக அனிதா ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அனிதாவின் மீது தீ பிடித்தது. இதை தொடர்ந்து முகம், சேலை யில் தீ பிடித்து எரிந்தது. இதனால் அனிதா அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த அனிதாவின் கணவர் ஜெயக்குமார் ஓடி வந்து அனிதாவின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அனிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×