search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alive"

    • சேலம் மாவட்டம் தீவட் டிப்பட்டி அடுத்த கே.மோ ரூர் பகுதியை சேர்ந்தவர் குமார் விவசாயி.
    • மேச் சலுக்காக கட்டி இருந்த இவரது மாடு, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந் துள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட் டிப்பட்டி அடுத்த கே.மோ ரூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(46), விவசாயி. இவர் சொந்தமாக ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் மேச் சலுக்காக கட்டி இருந்த இவரது மாடு, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந் துள்ளது. இது சம் பந்தமாக காடை யாம்பட்டி தீய ணைப்புத் துறையின ருக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் ராஜ சேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து, பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

    • தாரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    • தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பாப்பம்பாடி கிராமம் சின்னப்பம்பட்டி சந்தை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் ,விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு சந்தை பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தது.

    அப்போது அருகில் இருந்த 60 அடி கிணற்றில் தவறி விழுந்தது .இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • சத்தியமங்கலம் அருகே ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.
    • மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள ஓட்டக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு வளர்த்து வருகிறார்.

    நேற்று மாலை ஓட்டக்குட்டை பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது மரத்தில் கட்டப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியை சுமதி அருகில் உள்ள ஒரு தொழுவத்தில் கட்டியிருந்தார்.

    சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் சென்ற போது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை காணவில்லை. அப்போது ஆட்டுக்கொட்டகையில் இருந்து விவசாய தோட்டம் வழியாக ஆட்டுக்குட்டியை சிறுத்தை இழுத்து சென்றதற்கான அடையாளம் காணப்பட்டது.

    எனவே சிறுத்தை தான் ஆட்டுக் குட்டியை உயிரோடு இழுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுமதி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து கால் தடயங்களை பார்த்த போது அது சிறுத்தையின் கால் தடம் தான் என்று உறுதிசெய்தனர்.

    மேலும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கவும் அவர்கள் பரிந்துரை செ ய்தனர். எனவே விரைவில் கூண்டு வைக்கப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் அருகே இறந்ததாக டாக்டர் கூறியவருக்கு மீண்டும் உயிர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சி சாமியார்புதூரை சேர்ந்தவர் தங்கவேலு (வயது46). தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது வி‌ஷ வண்டு கடித்தது. உடனே மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தங்கவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இனையடுத்து சோகத்துடன் அவரை வீட்டிற்கு கொண்டு வந்தனர். குளிர்சாதன பெட்டியில் வைத்து மாலைகள் அணிவித்தனர். அப்போது திடீரென தங்கவேலு விழித்து பார்த்தார். தூங்கி எழுந்தவர் போல தனக்கு என்ன ஆயிற்று என கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து மீண்டும் அவரை ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து டாக்டர்கள் சோதனை செய்தனர்.

    தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×