search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோட்டில்"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாலமோர் ரோட்டில் இரு பக்கமும் 10 அடி அகலப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், வணிகர்கள், கடை உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளனர். அப்போது சாலையை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக 10 அடி அகலத்தில் இடத்தை விட்டு கொடுக்கும்படி கேட்டுள்ளார்கள். மேலும் பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சாலையை விரிவுபடுத்த இடம் தரவில்லை என்றால் கட்டிடத்தின் மேல் நகர் ஊரமைப்பு திட்டம் 56, 57-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தங்கள் கட்டிட உபயோகம் நிறுத்தப்படும் என்றும் அச்சுறுத்தி வருகின்றனர்.மேலும் இடத்தை விட்டு தர வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்கள் சம்ம தித்து விட்டதாக உண்மைக்கு மாறாக வெளியிட்டுள்ளார்கள். சாலை விரிவாக்கத்திற்கு இடம் விட்டு தர மாட்டோம் என்று வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கூறவில்லை. மேற்கண்ட இடத்திற்கான இட மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கினால் அவர்கள் தருவதற்கு தயாராக உள்ளார்கள்.

    அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு மேற்கண்ட சாலையினை அகலப்படுத்துவதற்கு தேவையான இடத்திற்குரிய இன்றைய மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகையினை அனுமதித்து வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது.
    • இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்த்தில் 10 வன சரகங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியான இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. அப்போது அந்த வழியாக வரும் லாரிகளை வழிமறித்து அதில் இருந்து கரும்புகளை தின்று வரு கிறது.

    மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து புலி, சிறுத்தைகளும் வெளியே வந்து செல்கிறது. இதே போல் கரடிகளும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை செல்போன்களில் படம் பிடித்தும் செல்கிறார்கள். அப்போது ஒரு சில நேரங்க ளில் வாகன ஓட்டிகளை துரத்துகிறது.

    இந்நிலையில் தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது. இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறிது தூரத்துக்கு முன்பே வாகனங்களை நிறுத்தி கொண்டனர்.

    இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலி யுறுத்தி உள்ளனர்.

    ×