என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி தற்கொலை
- செல்போன் தர மறுத்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.
- 2 நாட்களாக மாணவி முத்துபிரியா வீட்டில் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு சாப்பிட மறுத்துள்ளார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் குதிரைசாரி குளத்தை சேர்ந்தவர் தில்லையப்பன். இவரது மகள் முத்து பிரியா(வயது18). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மாணவி பிரியா ஆன்ராய்டு செல்போன் வைத்துள்ளார். ஆகவே அடிக்கடி செல்போனில் மூழ்கியதால் அவருக்கு படிப்பில் நாட்டம் குறைந்த தாக கூறப்படுகிறது.இதனால் பெற்றோர் கண்டித்து அவரிடமிருந்து செல்போனை வாங்கி வைத்து கொண்டனர்.
தனது செல்போனை திருப்பி தருமாறு கேட்டு கடந்த 2 நாட்களாக மாணவி முத்துபிரியா வீட்டில் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் விரக்தி யடைந்த மாணவி நேற்று இரவு வீட்டில் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.