search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல்"

    • இப்படம் ஒரு மனிதனுக்கும் பேய்க்கும் இடையிலான தனித்துவமான காதல் கதையாகும்.
    • இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ஏற்கனவே பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

    'ரவுடி பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆஷிஷ் ரெட்டி. தற்போது 'லவ் மீ - இப் யூ டேர்' என்ற   ரொமாண்டிக் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். தில் ராஜு ' புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

    இந்த படத்தை புதுமுக இயக்குனர் அருண் பீமவரபு இயக்கி உள்ளார். எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.இப்படம் ஒரு மனிதனுக்கும் பேய்க்கும் இடையிலான தனித்துவமான காதல் கதையாகும்.படக்காட்சிகளை பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து வருகிற ஏப்ரல் 25 - ந்தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.




    இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ஏற்கனவே பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படம் விரைவில் தியேட்டரில் ரீலீஸ் ஆவதையொட்டி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை
    • சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகளான ஸ்பூர்த்தி (வயது 16) பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

    தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
    • போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு தேர்வுகளுக்கு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பவானி (வயது 19). இவர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    பவானியின் தாய், தந்தையர் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். இதனால் பவானி பெரியப்பா, பெரியசாமி மற்றும் உறவினர்கள் ஆதரவில் இருக்கிறார்.

    இந்த நிலையில் பவானி மற்றும் தனபால் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவரம் தனபால் வீட்டுக்கு தெரிந்து, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

    ஆதரவற்ற பெண்ணை தனபால் கரம்பிடிப்பதை அறிந்த அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். இதை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு அந்த பகுதியில் நின்ற அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வந்த பவானிக்கு கவுன்சிலர் வசுமதி பிரபு படிப்பு உதவி அளித்து வந்த நிலையில். தற்போது திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் உள்ளிட்ட செலவுகளையும் ஏற்று உதவி செய்தார் .

    • பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார்.
    • திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஓடைமேடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், மாலதி தம்பதியினரின் மகள் சிவரஞ்சனி (24). பி.இ. பட்டதாரி.

    அந்தியூர் அடுத்த சமத்துவபுரம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் முருகன், சரசு தம்பதியினரின் மகன் பிரபாகரன் (30). டெல்லியில் தனியார் கம்பெனியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், சிவரஞ்சனி- பிரபாகரன் ஆகிய இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வருவதாக தெரிகிறது. இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வந்ததால், பிரபாகரனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரன் சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி புகார் கொடுத்தார். 2 பேரையும் அழைத்து பேசிய போலீசார், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போதும் பிரபாகரன், சிவரஞ்சனியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

    தொடர்ந்து மீண்டும் இன்று மதியம் 12 மணிக்கு மேல் கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பிரபாகரன் வீட்டு முன்பு சிவரஞ்சனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • வடகிழக்கு டெல்லியில் உள்ள பாகீரதி விகாருக்கு வருமாறும் கூறினார்.
    • பைசல் மற்றும் சமீர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு பிளக்ஸ் தயாரிப்பு கடையில் வேலை பார்த்து வந்தவர் மாஹிர் என்கிற இம்ரான் ( வயது 18) இவருக்கும் 21 வயது பெண் ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்.

    இந்த சூழ்நிலையில் அந்த பெண்ணுக்கு அர்மான் கான் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக நட்பு உருவானது. சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்தித்தனர். அந்த சமயம் அப்பெண் வீடியோ காலில் மாஹிருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததை அம்ரான்கான் பார்த்தார். இது தொடர்பாக அவர் அந்த பெண்ணிடம் கேட்டார். அதற்கு அவர் தான் மாஹிரை விரும்புவதாக தெரிவித்தார். இது அம்ரான்கானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்த அம்ரான்கான் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    நேற்று அவர் மாஹிரை தொடர்பு கொண்டு காதலியின் செல்போனை திருப்பி தருகிறேன் என்றும் அதனால் வடகிழக்கு டெல்லியில் உள்ள பாகீரதி விகாருக்கு வருமாறும் கூறினார்.

    இதையடுத்து மாஹிர் அந்த இடத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு குறுகிய சந்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த அர்மான்கான் மாஹிரை சரமாரியாக கத்தியால் குத்தினார். 3 பேரும் சேர்ந்து அவரை 50 தடவை கத்தியால் குத்தினார்கள். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மாஹிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இக்கொலை தொடர்பாக அர்மான்கான் மற்றும் அவரது நண்பர்கள் பைசல் மற்றும் சமீர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கத்தாய் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்கத்தாய் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
    • இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துவை கைது செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர் பாண்டியன். கூலி தொழிலாளி. இவருக்கு தங்கத்தாய்(வயது 20) என்ற மகளும், முத்து(18) என்ற மகனும் உள்ளனர். முத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்வதற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், நேற்று இரவு அவரது வீட்டில் இது தொடர்பாக அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரம் அடைந்த முத்து அரிவாளால் சகோதரி என்று கூட பாராமல் தங்கத்தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

    இதுகுறித்து அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தங்கத்தாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துவை கைது செய்தார்.

    விசாரணையில் காதல் விவகாரத்தில் தங்கத்தாய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிளஸ்-2 வரை படித்திருந்த தங்கத்தாய், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு அவருடன் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை தங்கத்தாய் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்கத்தாய் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தங்கத்தாய்க்கு திருமணம் செய்ய பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும், அதனை தங்கத்தாய் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்தனர். நேற்றும் மாப்பிள்ளை பார்ப்பது சம்பந்தமாக காலை முதல் வீட்டில் இருந்தவர்கள் சண்டையிட்டு வந்த சூழலில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்து வீட்டின் முன்பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
    • நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (வயது 28). இவரும் வீரலப்பட்டியைச் சேர்ந்த நந்தினி (26) என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    நந்தினி ஒட்டன்சத்திரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே திருமணமான 2 மாதத்திலேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் நந்தினி கணவரை விட்டு பிரிந்து வீரலப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் பிரதீப்குமார் தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு பல முறை அழைத்தும் வரவில்லை. இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நந்தினி தனது அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளரான அசோக்குமார் (29) என்பவரை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் ஒன்றாகவே பைக்கில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.

    இதன் காரணமாகத்தான் தனது மனைவி பிரிந்து சென்று விட்டார் என பிரதீப் குமார் சந்தேகமடைந்தார். இந்நிலையில் கள்ளிமந்தயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்தினி தனது காதலன் அசோக்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    இதை பார்த்ததும் பிரதீப்குமார் கோபமடைந்தார். தான் ஓட்டி வந்த காரை அவர்கள் மீது மோத விட்டு கீழே தள்ளினார். இதில் நந்தினி மற்றும் அசோக்குமார் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் பிரதீப்குமாரை கைது செய்தனர். 

    • தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை சங்கர நாராயணன்-அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது.
    • திருமணமானது தமிழில் வேத மந்திரங்கள் ஓதி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 35). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அமெரிக்கா மசாச்சூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் அன்னி டிக்சன் (35) . இவர் எம்.ஏ. சைக்காலஜி படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் சங்கர நாராயணன்-அன்னி டிக்சன் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் அன்னோன்யமாக காதலித்து வந்தனர்.

    இதையடுத்து சங்கரநாராயணன் அமெரிக்க பெண்ணை காதலித்து வரும் விஷயத்தை தஞ்சையில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் மகனின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். இதை போல் அன்னி டிக்சனும் தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் வாங்கினார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை சங்கர நாராயணன்-அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் சங்கர நாராயணன் பெற்றோர், உறவினர்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அன்னி டிக்சன் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    திருமணமானது தமிழில் வேத மந்திரங்கள் ஓதி நடைபெற்றது. மேலும் மணமகன் சங்கர நாராயணன் திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனைவரும் தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    கடல் கடந்து காதலித்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த இரு வீட்டு பெற்றோரையும் பலர் பாராட்டினர்.

    • சிறுமி கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • தந்தை மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுமி, வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    சிறுமியும், அந்த வாலிபரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு தெரியவந்தது. தனது மகள் வேற்று மதத்தை சேர்ந்த வாலிபரை காதலிப்பதையறிந்த அவர் ஆத்திரமடைந்தார். அவர் தனது மகளை கண்டித்துள்ளார்.

    மேலும் காதலை கைவிட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். ஆனால் சிறுமியோ தனது காதலை கைவிடவில்லை. தொடர்ந்து அந்த வாலிபருடன் பேசிய படி இருந்திருக்கிறார். இதனால் சிறுமி வைத்திருந்த செல்போனை பறித்து வைத்துக்கொண்டார். ஆனால் சிறுமி வேறொரு போன் மூலமாக காதலனுடன் பேசியபடி இருந்திருக்கிறார்.

    இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, சம்பவத்தன்று சிறுமியிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது அவர், பெற்ற மகள் என்றும் பாராமல் இரும்பு கம்பியால் மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி நிலைகுலைந்து தரையில் விழுந்தார்.

    அப்போது அவர், வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து தனது மகளின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார். பெற்ற மகளை கொடூரமாக தாக்கியது மட்டுமின்றி, அவளை கொலை செய்யும் நோக்கில் விஷத்தை வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றுவதை சிறுமியின் தாய் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அவர் தனது கணவரிடமிருந்து மகளை மீட்டார். சிறுமி கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    சிறுமியை பெற்ற தந்தையே கொடூரமாக தாக்கி விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து, சிறுமி சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு சிறுமியின் தந்தையை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. காதலை கைவிட மறுத்த மகளை தந்தையே கொல்ல முயன்ற சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புரிதல் இருந்தால் தான் உறவு நீண்ட காலம் நீடிக்கும்.
    • புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும்.

    கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இதனை விளக்கும் ஒரு அருமையான கதை உங்களுக்காக...

    மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு நாள் இந்த மனுஷனோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். தன்னுடைய கணவனுக்கு தன்னுடனான வாழ்க்கை அலுப்பு தட்டி இருக்குமோ என்று ஒரு யோசனை. அதனை சோதிக்க நினைத்தாள் மனைவி. ஒருவேளை தான் விலகிப்போய்விட்டால் கணவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை பார்க்க ஆர்வம் கொண்டாள்.

    எனவே அன்று தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சின்ன காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டு கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்டாள்.

    கணவன் வழக்கம் போல வீடு திரும்பினான். மேஜையின் மீது இருந்த குறிப்பில் உன்னுடனான வாழ்க்கை சலித்துவிட்டது. நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது. கணவன் குறிப்பை படித்துவிட்டு குறிப்பின் பின்புறத்தில் ஏதோ கிறுக்கிவிட்டு தன் செல்போனை எடுத்து பேசினான்.

    அதில் பேசும்போது, கடைசியாக அவள் போய்விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கிவிட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராக இரு என்று சொல்லிக்கொண்டே கதவை பூட்டிவிட்டு வெளியேறினான்.

    உடனே அவனது மனைவி அழுதுகொண்டே கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தவள், அவர் நம்மை தேடவில்லை, கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்று எண்ணிக்கொண்டு கோபத்துடன் குறிப்பின் பின்னால் அவன் என்ன எழுதினான் என்று பார்க்க அந்த குறிப்பை எடுத்து பார்த்தால்.

    அதில், ஏ! பைத்தியம் நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்கிறதை நான் பார்த்துவிட்டேன். எனக்கு பசிக்குது, கடைக்கு போய் பிரட் வாங்கி வருகிறேன். நீ எனக்கு பிரட் ஆம்லெட் போட்டு கொடு சாப்பிடுறேன். உனக்கு ஏதாவது வேண்டும்னா, எனக்கு போன் பண்ணு. இந்த உலகத்தில் மற்றவர்களை விட நான் உன்னை தான் அதிகமாக நேசிக்கிறேன். என் அன்பு முத்தங்கள்! என்று எழுதி இருந்தான். இதைக்கண்டதும் மனைவிக்கும் ஒரே ஆனந்தம்.

    கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகிறது. அந்த பராமரிப்பு பற்றி கணவனும் மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரசியமிக்க துணையாக இருக்கலாம்.

    • இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.
    • அவர்கள் திருமணத்திற்கு சம்ம திக்காமல், 16 பவுன் நகை தொடர்பாக பேச மறுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பெரியார் நகரை சேர்ந்தவர் மரியபிரகாசம் மகள் ஜெனிலாமேரி (வயது 34). இவர் பள்ளியில் படிக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுடன் நட்பாக பழகி வந்தார். ஐஸ்வர்யாவின் உறவினரான விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்த சுதாகர் (38) என்பவருடன் ஜெனிலாமேரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்ம தத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுதாகருக்கும், ஜெனிலாமேரிவுக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது நண்பர்களுடன் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு பணம் தேவை படுவதாகவும் ஜெனிலா மேரியிடம் சுதாகர் கேட்டுள்ளார்.

    திருமணத்திற்காக வைத்திருந்த 16 பவுன் நகையை சுதாகரிடம் ஜெனிலாமேரி கொடுத்தார். இதனை பெற்றுக்கொண்ட சுதாகர், நாளடைவில் ஜெனிலாமேரியிடம் போனில் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த ஜெனிலாமேரி, திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாமென சுதாகரிடம் கேட்டுள்ளார். விரைவில் கூறுகிறேன் என்று பதில் கூறியுள்ளார். 16 பவுன் நகையை எப்போது திருப்பி தரப்போகிறாய் என ஜெனிலாமேரி கேட்டுள்ளார். இதற்கு பதில் கூறாமல் செல்போனை துண்டித்த சுதாகர், கடந்த ஒரு வார காலமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    மேலும் அதிர்ச்சிக் குள்ளான ஜெனிலாமேரி நடந்த விஷயங்களை பெற்றோரிடம் கூறி யுள்ளார். அவர்கள் சுதாகரின் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத் தியபோது, அவர்கள் திருமணத்திற்கு சம்ம திக்காமல், 16 பவுன் நகை தொடர்பாக பேச மறுத்தனர். இதையடுத்து இது தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசாரிடம், ஜெனிலா மேரி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் சுதாகர் மீது நகை மோசடி வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாகியுள்ள சுதாகரை குறிஞ்சிப்பாடி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகி ன்றனர். இந்த சம்பவம் குறிஞ்சிப்பாடியில் பர பரப்பை ஏற்படுத் தியுள்ளது.

    • மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலி பட்டணம் போலீசில் புகார் அளித்தனர்.
    • பனிந்திரா மற்றும் இளம்பெண் இருவரும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

    இவர்களது காதலுக்கும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 29-ந்தேதி பனிந்திரா தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்தார். அதன்படி இளம்பெண் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார்.

    மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலி பட்டணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பண்ணை தேடி வந்தனர். பனிந்திரா தனது காதலியை அழைத்துக்கொண்டு கோபால பட்டினத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.

    நேற்று முன்தினம் பனிந்திரா மற்றும் இளம்பெண் இருவரும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர். அந்த கடற்கரையில் உயரமான இடத்தில் அமர்ந்திருந்தனர். அந்த இடத்திற்கு கீழே பெரிய அளவிலான பாறைகள் உள்ளன. அதில் ராட்சத அலைகள் வந்து சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.

    அதனை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இளம்பெண் திடீரென தவறி கீழே விழுந்தார்.

    உயரமான இடத்தில் இருந்து விழுந்த அவர் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். அலைகள் இருந்ததால் அவர் எங்கே இருக்கிறார் என்பது பனிந்திராவுக்கு தெரியவில்லை. மேலும் அப்போது இருட்ட தொடங்கியது.

    இதனால் பயந்து போன பனிந்திரா தனது காதலியை காப்பாற்ற எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தார். இரவு நேரமானதால் கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.

    பாறை இடுக்குகளில் சிக்கி விடிய விடிய தவித்தார். அதிகாலை நேரத்தில் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் புறப்பட்டு வந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டனர். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

    இதுகுறித்து மீனவர்கள் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பெற்றோரை போலீசார் எச்சரித்தனர். கடலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் தவறி விழுந்து விட்டேன்.

    இந்த சம்பவத்திற்கும் காதலன் பனிந்திராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இளம்பெண் உறுதியாக கூறினார்.

    காதலியை தவிக்க விட்டு காப்பாற்றாமல் தப்பி ஓடிய காதலன் பனிந்திராவை செல்போனில் தொடர்பு கொள்ள போலீசார் முயன்றனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×