search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yo Yo Test"

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்டிற்கு தயாராகும் இங்கிலாந்தின் மூத்த வீரர்களான ஆண்டர்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் யோ-யோ டெஸ்டில் அசத்தியுள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காமில் தொடங்குகிறது. இதற்கு ஆயத்தம் ஆகும் வகையில் இங்கிலாந்து வீரர்கள் யோ-யோ டெஸ்டில் கலந்து கொண்டார்கள்.

    இளம் வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால், 33 வயதிற்கு மேலான குக், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் திணறுவார்கள் என்று எதிர்பார்த்தனர்.



    ஆனால், அலஸ்டைர் குக் யோ-யோ டெஸ்டில் அசால்டாக பாஸ் ஆனார். அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சனும் தேர்ச்சி பெற்றார். இந்திய அணி வீரர்கள் 16.1 புள்ளி பெற்றாலே பாஸ். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் 19 புள்ளிகள் பெற வேண்டும்.

    யோ-யோ டெஸ்டிற்கு முன் அலஸ்டைர் குக் 3 கி.மீட்டர் தூரம் ஓடியதாக தெரிகிறது.
    இந்திய தேசிய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முன் யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும் என்று அசாருதீன் தெரிவித்துள்ளார். #YoYoTest
    இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்றால் வீரர்கள் கட்டாயம் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும். குறைந்தது 16.1 புள்ளிகள் பெற வேண்டும். இந்திய சீனியர் மற்றும் இந்தியா ‘ஏ’ கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த அணிகளில் இடம் பிடித்திருந்த அம்பதி ராயுடு மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனது.

    அதேபோல் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி யோ-யோ டெஸ்ட் தோல்வியால் அணியில் இடம்பெறவில்லை.

    இதனால் யோ-யோ டெஸ்ட் மீது முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் வீரர்கள் தேர்விற்கு முன்பே யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.



    இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரையில் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.

    ஆனால், அணியில் தேர்வானபின், யோ-யோ டெஸ்டால் அவரது வாய்ப்பு பறிபோகியுள்ளது. அணி தேர்வுக்கு முன் யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள நிலை எல்லோருக்கும் தர்மசங்கடமாக உள்ளது’’ என்றார்.
    யோ-யோ டெஸ்டில் பாஸ் என்றால் இந்திய அணியில் இடம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான் என்கிறார் ரவி சாஸ்திரி. #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் உடற்தகுதியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் யோ-யோ டெஸ்ட் என்ற முறையை கையாண்டு வருகிறது.

    உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும்போது அவர்கள் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும். அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தொடரை இழந்தனர்.

    யோ-யோ டெஸ்ட் குறித்து முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்காக இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.



    புறப்படுவதற்கு முன்பு இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். அப்போது, ‘‘யோ-யோ டெஸ்ட் கட்டாயம். யோ-யோ டெஸ்ட் தொடர்பான தத்துவம் மிகவும் எளிதானது. நீங்கள் இந்த டெஸ்டில் பாஸ் ஆனால் இந்திய அணியில் விளையாடலாம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான். யாராவது ஒருவர் ஒரு முடிவில் உறுதியாக இருக்காலாம். மற்றவர்களுக்காக இந்திய அணி செல்ல முடியாது. இந்திய அணி கேப்டன் இதில் உறுதியாக உள்ளார். அதன்பின் தேர்வாளர்கள், ஒட்டுமொத்த அணி நிர்வாகம் இதே முடிவில் உள்ளது’’ என்றார்.
    இந்திய அணியில் தேர்வாக யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாய விதிமுறைக்கு எதிராக குரல்கள் தற்போது வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. #YoYoTest

    இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாக யோ-யோ டெஸ்டில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை அணில் கும்ளே பயிற்சியாளராக இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் இந்த முறை இருந்த போது, உடல்தகுதி வீரர்களுக்கு மிகவும் முக்கியமாக கருதப்பட்டு இந்த முறையை இந்தியாவிலும் அவர் அறிமுகம் செய்தார்.

    இந்தியாவில் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற 16.1 மதிப்பெண் எடுத்தாகவேண்டும். ஒவ்வொரு அணிக்கேற்ப இந்த மதிப்பெண் மாறுபடுகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்தாண்டு நடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட அம்பாத்தி ராயுடு, சஞ்சு சாம்சன் ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அணிக்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர் இந்திய அணியில் இடம் பெறாமல் போவதற்கு இந்த யோ-யோ டெஸ்ட் காரணமாகிறது என்றால், இது ஒருதலைப்பட்சமானது என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஷ்ரேயாஸ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் யோ-யோ டெஸ்டில் 19 மதிப்பெண் பெற்றால் மட்டுமே வீரர்களை அணிக்கு தேர்வு செய்கின்றனர். தென்னாப்பிரிக்க அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மதிப்பெண் இலக்காக உள்ளது. முன்னணி அணியாக உள்ள ஆஸ்திரேலியா 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த யோ-யோ டெஸ்டை தூக்கி விட்டு வேறு மாதிரியான சோதனையை .வழங்கிறது. 
    சில நாட்களுக்கு முன்னதாக நடந்த யோ-யோ டெஸ்டில் பங்கேற்காதது குறித்து வெளியான தகவல்களுக்கு ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர்.

    இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று முடிந்த நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மாவிற்கு யோ-யோ டெஸ்ட் நடைபெறாமல் இருந்தது. இவருக்கு ஐபிஎல் தொடரின்போது இரண்டு முறை யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட்டது அப்போது தோல்வியடைந்தார்.

    இதனால், முகம்மது சமி மற்றும் சாம்சன் ஆகியோரை போல ரோகித் சர்மாவும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாமல் போயிருக்கலாம் எனவும் அவருக்கு பதிலாக ரகானேவை மாற்று வீரராக தயார் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மூலம் இவர் அணியின் சக வீரர்களுடன் இங்கிலாந்து செல்ல உள்ளார். இந்நிலையில், தனது குறித்தான செய்திகள் தொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், “தேவையில்லாமல் சில சேனல்களும் மீடியாவும் தவறான தகவல்களை பரப்புகின்றன. நான் எங்கே போயிருந்தேன், எங்கு நேரத்தை செலவிட்டேன். ஏன் குறிப்பிட்ட நாளில் யோ-யோ தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க தேவையில்லை. அது எனது சொந்த விவகாரம். செய்திகளை வெளியிடும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து வெளியிடுவது நல்லது” என காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார். 
    யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற்றதால் ரோகித் சர்மா 23-ந்தேதி சக வீரர்களுடன் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார். #ENGvIND #RohitSharma
    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று முடிந்த நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மாவிற்கு யோ-யோ டெஸ்ட் நடைபெறாமல் இருந்தது. இவருக்கு ஐபிஎல் தொடரின்போது இரண்டு முறை யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட்டது அப்போது தோல்வியடைந்தார்.



    இதனால் தற்போது ரகனாவை மாற்று வீரராக தயார் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மூலம் இவர் அணியின் சக வீரர்களுடன் இங்கிலாந்து பறக்கினார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி வரும் 23-ந்தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது.
    யோ-யோ தேர்வில் வீரர்கள் தேர்ச்சிபெற இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சந்தீப் பட்டேல் கேள்வி கூறியுள்ளார். #SandeepPatil #YoYoTest

    புதுடெல்லி:
     
    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சர்வேத போட்டிகளில் விளையாட யோ-யோ எனப்படும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா வெகு நாட்களாக போராடி தோல்வி அடைந்து வந்தனர்.
     
    சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. இதில் சுரேஷ் ரெய்னா,  ஐபிஎல் 2018 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு ஆகியோர் இடம்பிடித்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்து அம்பதி ராயுடு இந்திய அணியில் இடம்பெற்றார்.

    இதையடுத்து நடத்தப்பட்ட யோ-யோ தேர்வில் டோனி, கோலி, ரெய்னா உள்ளிட்டோர் தேர்ச்சி அடைந்து அணியில் இடம்பிடித்தனர்.
    ஆனால் யோ-யோ தேர்வில் அம்பதி ராயுடு தோல்வி அடைந்ததால் இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதனால் இந்த வாய்ப்பு சுரேஷ் ரெய்னாவுக்கு கிடைத்தது. இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.
     


    இந்நிலையில் யோ-யோ தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கென்யா அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சப்தீப் பட்டேல் கேள்வி எழுப்பியுள்ளார். 

    இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க இரண்டு இன்னிங்சுகள் வழங்கப்படுவது போல யோ-யோ தேர்விலும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஒரு வீரர் அந்த தேர்வில், தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருக்கு சிறிது நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ மீண்டும் அடித்த வாய்ப்பை கொடுங்கள். 

    அம்பதி ராயுடு யோ-யோ தேர்வில் தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். உள்ளூர் போட்டிகளில் ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடிய அவரது திறைமையை, அரை மணி நேரம் தேர்வு மூலம் எப்படி கணக்கிடுவீர்கள். அதை வைத்து அவரை அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம்?. இப்படி வீரர்களை நீக்காதீர்கள்,  என அவர் கூறியுள்ளார். #SandeepPatil #YoYoTest
    யோ-யோ சோதனையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அம்பதி ராயுடுவுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #AmbatiRayudu #YoYotest #SureshRaina

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர். 

    இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடு இந்திய அணியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்நிலையில், ராயுடுவுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளது. 

    இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.டோனி, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ். #AmbatiRayudu #YoYotest #SureshRaina
    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்படும் யோ-யோ சோதனையில் அம்பதி ராயுடு தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #AmbatiRayudu #YoYotest

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஓவ்வொரு தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவும் வீரர்களுக்கு யோ-யோ சோதனை என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்படுகிறது. அதில் வீரர்கள் 16.3 என்ற மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற முடியும். 

    இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர். 



    இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்தார். இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ராயுடு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmbatiRayudu #YoYotest
    ×