search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
    X

    சங்கராபுரம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    • சங்கராபுரம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (40) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார். இதைபார்த்த தயாளன் எதற்காக எனது நிலத்தில் டிராக்டரை ஓட்டிச் செல்கிறாய் என கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அருள் தயாளனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அருள் மீது சங்கராபுரம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

    Next Story
    ×