என் மலர்
இந்தியா

கணவரின் டாவோஸ் பயணத்தை பிக்னிக் என்பதா?- சஞ்சய் ராவத்துக்கு பட்நாவிஸ் மனைவி பதிலடி
- இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் டாவோஸில் பிக்னிக்கில் கலந்து கொள்கின்றனர்.
- இந்தியக் கண்ணோட்டத்தில் டாவோஸ் மாநாடு அபத்தமானது- சஞ்சய் ராவத்.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சென்றுள்ளார். அவரது பயணத்தை சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்திருந்தார்.
இதற்கு பட்நாவிஸ் மனைவி அம்ருதா பட்நாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அம்ருதா பட்நாவிஸ் தெரிவித்திருப்பதாவது:-
சஞ்சய் ராவத்தின் மொழியை ஒருபோதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், பிக்னிக் செல்லும் ஒருவர், பத்திரிகையார்களை சந்திக்கமாட்டார். இந்தியா மற்றும் மகாராஷ்டிராவிற்கு முதலீட்டை கொண்டுவந்து, வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்பதை மட்டுமே சொல்வேன்.
அதனால் சஞ்சய் ராவத்தின் கருத்து மற்றும் இதுபோன்ற மற்றவர்களின் கருத்துகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. இந்த மாநாட்டிற்கு செல்வது ஒவ்வொரு மாநில தலைவர்களின் பணி என நம்புகிறேன்.
இவ்வாறு அம்ருதா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் டாவோஸில் பிக்னிக்கில் கலந்து கொள்கின்றனர். இந்தியக் கண்ணோட்டத்தில் டாவோஸ் மாநாடு அபத்தமானது என சஞ்சய் ராவத் விமர்சனம் செய்திருந்தார்.






