search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP MPS"

    • ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த தொடரில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
    • முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் அவையில் இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    முன்னதாக எதற்காக இந்த கூட்டம் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து முதல் நாளில் விவாதிக்கப்பட உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு 17-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த தொடரில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மக்களவை பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டு உள்ளார்.

    முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் அவையில் இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
    • அனைத்து எம்.பி.க்களும் அவர்களது தொகுதிகளில் மே மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை பிரசாரம் செய்து அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறுங்கள்.

    புதுடெல்லி:

    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி அனைத்து எம்.பி.க்களும் அவர்களது தொகுதிகளில் மே மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை பிரசாரம் செய்து அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறுங்கள்.

    இவ்வாறு மோடி பேசியதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு கட்சியின் தலைர் ஜே.பி.நட்டா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    • பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் வருகிற 16-ந்தேதி டெல்லிக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
    • அன்று மாலை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அன்றே ஜனாதிபதி பதவிக்கு தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கு ஒருநாள் முன்னதாக 17-ந்தேதி பா.ஜனதா பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது.

    வழக்கமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் முதல் செவ்வாய்க்கிழமை பா.ஜனதா பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் வருகிற 16-ந்தேதி டெல்லிக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அன்று மாலை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பது குறித்து பயிற்சியும் அப்போது அளிக்கப்படுகிறது. அன்று இரவு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு ஜே.பி.நட்டா இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    மறுநாள் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தின் போது பா.ஜனதா எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் முறையாக வாக்களிக்க உள்ளதால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகிறது.

    இதற்கிடையே பா.ஜனதா மூத்த தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்ற ஆலோசனை தொடங்கி உள்ளது. அனேகமாக அடுத்த வாரம் பதவி ஏற்பு விழா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு மோடி பதவி ஏற்ற போது தெற்கு ஆசிய நாட்டு தலைவர்களை அழைத்து இருந்தார். இந்த தடவை அந்த நடைமுறைகளில் மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

    தேர்தல் முடிவுகள் இன்று இரவுக்குள் முழுமையாக தெரிந்து விடும். அதன் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும்.

    அந்த சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக ஒருமனதுடன் மோடி தேர்வு செய்யப்படுவார். அதற்கான ஆவணத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் கையெழுத்திடுவார்கள்.

    அந்த கடிதத்துடன் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதன் பிறகு டெல்லியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும்.

    கடந்த முறை மோடி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த மூத்த தலைவர்களில் சிலர் இந்த மந்திரிசபையில் இடம் பெறமாட்டார்கள். அதுபோல சில மத்திய மந்திரிகள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். சில மத்திய மந்திரிகள் மீது மோடி அதிருப்தியில் உள்ளார்.

    எனவே கடந்த முறை மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர்களில் பலர் இந்த தடவை இடம் பெற வாய்ப்பு இல்லை. முக்கிய இலாகாக்களுக்கு புதிய முகங்கள் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.
    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக பா.ஜனதா எம்.பி.க்களை மாநில வாரியாக சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு நாளை தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. #ParliamentElection #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

    இதனால் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி உள்ளன.

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களை பா.ஜனதா இழந்தது. மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், பா.ஜனதாவுக்கு இது பின்னடைவாகவே கருதப்படுகிறது.



    இதையடுத்து பா.ஜனதா மூத்த தலைவர்கள் கட்சியை மீண்டும் பலப்படுத்தி புத்துணர்ச்சி கொடுப்பதற்காக அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும் பா.ஜனதா எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    பா.ஜனதா எம்.பி.க்களை மாநில வாரியாக சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் 30 முதல் 40 எம்.பி.க்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச எம்.பி.க்கள் இருப்பதால் அவர்களை 3 கட்டங்களாக சந்திக்க பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு உத்தரபிரதேசம், மத்திய உத்தரபிரதேசம், மேற்கு உத்தரபிரதேசம் எம்.பி.க்கள் என 3 கட்டமாக இந்த சந்திப்பு நடக்கிறது.

    எம்.பி.க்களுடனான மோடியின் சந்திப்பு மத்திய மந்திரிகளில் யாராவது ஒருவர் வீட்டில் நடக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநில எம்.பி.க்களை மோடி 28-ந்தேதி சந்திக்க உள்ளார்.

    டெல்லி, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், காஷ்மீர், அரியானா மாநிலங்களின் எம்.பி.க்களை நாளை மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது தேர்தல் பிரசாரத்தை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி பிரதமர் மோடி ஆலோசனை வழங்க உள்ளார்.

    ஒவ்வொரு எம்.பி.யும் புதிய திட்டங்களுடன் வருமாறும் பிரதமர் நரேந்திர மோடியிடம் சகஜமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #ParliamentElection #PMModi
    ரபேல் விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது, மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

    மேலும் ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.


    ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக எம்பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்தும், ரபேல், ரிசர்வ் வங்கி விவகாரத்தை முன்வைத்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இரு தரப்பினரும் இடைவிடாமல் முழக்கமிட்டதால் முதலில் அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடியபோதும், அமளி நீடித்தது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.  #RafaleDeal #WinterSession #RajyaSabhaAdjourned 
    ரபேல் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வரும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #BJPRuckus
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது. இன்றும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி விவகாரம், பணமதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று மீண்டும் நோட்டீஸ் கொடுத்தார்.  இதேபோல் ரபேல் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி சுனில் குமார் ஜக்கார் மக்களவையில் மீண்டும் நோட்டீஸ் கொடுத்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது, மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

    மேலும் ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.

    ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக எம்பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #BJPRuckus
    5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக டெல்லியில் இன்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். #AssemblyPollResults #Modi #BJPMPs
    புதுடெல்லி:

    நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

    தெலுங்கானாவில் மிகப்பெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்ற கனவும் நனவாகிப்போனது. அங்கு முன்பு 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா இந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மிசோரமிலும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அங்கு மிசோரம் தேசிய முன்னணியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

    பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்த 3 மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 62 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்தி பேசும் இந்த 3 பெரிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி பா.ஜனதாவுக்கு வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

    இதன் எதிரொலியாக பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சுமார் 7 மணி நேரம் ஆலோசனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் வாரந்தோறும் கட்சி எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது வழக்கம். இதில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றியே ஆலோசிக்கப்படும்.

    ஆனால் இன்றைய எம்.பி.க்கள் கூட்டத்தில் 5 மாநில தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராவது குறித்து மோடி எம்.பி. க்களுக்கு ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து இன்று மதியம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, கட்சியின் தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட கூட்டம் தான் என்றும், கட்சிரீதியான பிரச்சினைகள் குறித்து தலைவர்களின் கருத்துகளை அமித்ஷா கேட்க இருப்பதாகவும் நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் டுவிட்டரில், “வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி தான். இந்த முடிவுகளால் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், மக்களுக்கு சேவையாற்றுவதிலும், இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதிலும் பா.ஜனதா மேலும் கடுமையாக பாடுபடும். இந்த தேர்தல் முடிவை கட்சி பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது” என்று தெரிவித்து இருந்தார்.  #AssemblyPollResults #Modi #BJPMPs
    சபரிமலை விவகாரத்தில் தலையிட வேண்டும் என கேரள ஆளுநருக்கு அம்மாநில பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். #SabarimalaiIssue #Sathasivam #BJPMPs
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, அங்கு பெண்கள் செல்ல முயன்றனர். ஆனால், பக்தர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து, சபரிமலையில் மாநில அரசு கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு போராட்டம் நடத்தியதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.

    மேலும், சமீபத்தில் சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பி கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கேரளாவை சேர்ந்த பாஜக எம்.பி.,க்கள் அம்மாநில கவர்னர் சதாசிவத்தை அவரது அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்தனர். அவர்கள் ஆளுநரிடம் ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில், சபரிமலை விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும். 144 தடை உத்தரவை நீக்க வேண்டும். அங்கு மீண்டும் அமைதி ஏற்பட தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. 
    #SabarimalaiIssue #Sathasivam #BJPMPs
    மனைவிகளின் கொடுமைகளில் இருந்து கணவர்களை காக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
    லக்னோ:

    சட்டங்களை தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பா.ஜ.க எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும், இதுதொடர்பாக ஆதரவு திரட்ட இம்மாதம் 23-ம் தேதி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக எம்.பி ஹரிநாராயன் ராஜ்பர் பேசுகையில், ‘மனைவிகளால் ஆண்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகுகிறார்கள். இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளது. பெண்களுக்கு நீதி கிடைக்க சட்டம் மற்றும் ஆணையம் உள்ளது. ஆனால் ஆண்களுக்கென்று இதுவரையில் அப்படி கிடையாது. தேசிய பெண்கள் ஆணையம் போன்று ஆண்களுக்கு என்றும் தனியாக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

    மற்றொரு எம்.பி.யான அன்சுயல் வர்மா கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளேன். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498ஏ-யில் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.

    கணவன் மற்றும் அவருடைய உறவினர்களால் பெண்கள் வரதட்சணை போன்ற கொடுமைப்படுத்தப்படுதல் இப்பிரிவில் அடங்குகிறது. இந்த சட்டப்பிரிவு ஆண்களை இலக்காக்க தவறாக பயன்படுத்தப்படுகிறது. 1998 முதல் 2015-ம் ஆண்டு வரையில் இதுபோன்ற விவகாராங்களில் தவறாக 27 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்’ என தெரிவித்துள்ளார். #BJP #AnshulVerma #HarinarayanRajbhar
    குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் பா.ஜ.க. எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை தடுக்கும் வகையில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால், இந்த திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஆந்திரா, குஜராத், மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஓரளவு தீவிரமாக திட்டங்கள் அமலில் உள்ளன.

    மற்ற மாநிலங்கள் எதுவும் இதை கண்டு கொள்ளவில்லை. மேலும் ஒரு சில சமூகத்தினர் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கடைபிடிப்பதை விரும்பவில்லை. இந்த திட்டத்தை பற்றி விமர்சனமும் எழுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கணேஷ்சிங் தலைமையில் 4 எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 125 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

    2 குழந்தைகள் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    ஏற்கனவே இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அதில், இருகுழந்தைகள் திட்டத்தை நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா எம்.பி. ராகவ்லக்கன்பால் சர்மா இது சம்பந்தமாக தனி நபர் தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார்.

    இந்த நிலையில்தான் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள்.

    சீனாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு அங்கு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.

    இதனால் குழந்தை பிறப்பு விகிதம் ஆண்டுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் வரை குறைந்தது. எனவே, கடந்த ஆண்டு இந்த திட்டத்தை விலக்கி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அக்கட்சி எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    கர்நாடகா தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. 99 இடங்களை பெற்று அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உயர்ந்துள்ளது. மேலும் அக்கட்சி வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    224 இடங்களை கொண்ட கர்நாடகா சட்டசபையில், தேர்தல் நடைபெற்ற 222 இடங்களில் பா.ஜ.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான மந்திர எண்ணான 112 என்ற இலக்கத்தை நெருங்க முடியவில்லை. முன்னிலை வகித்து வரும் இடங்களையும் சேர்த்து மொத்தம் 104 இடங்களில் மட்டுமே அதிகபட்சமாக பா.ஜ.க. வேட்பாளர்கள் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


    இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலுகத்தில் அக்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். #karnatakaverdict #karnatakaelection2018
    ×