search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "party meeting"

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 6ம் தேதி நடைபெற இருந்தது.
    • டிசம்பர் 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    இந்த தேர்தல் முடிவுகளின் தாக்கம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 6ம் தேதி நடைபெற இருந்தது. பிறகு, ஆலோசனைக் கூட்டம் ஒத்திடைவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் வரும் 19ம் தேதி அன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் டிசம்பர் 19ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

    இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் டெல்லி வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில், சுமார் 28 எதிர்க்கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது:- ஒவ்வொருவர் வாழ்விலும் குருவாக, வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் இல்லை என்றால் யாரும் வாழ்வில் முன்னேற முடியாது. உடுமலையில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாக இங்கு கொண்டாடப்பட்டது என்றார். நிகழ்ச்சியில் குடிமங்கலம், பூளவாடி உட்பட அரசு பள்ளிகளில் 10,12 ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவி களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இறுதியாக மது ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு பொதுக்கூட்டத்தில் நடைப்பெற்றது.இதில் சட கோப ராமானுஜ ஜீயர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி ,உடுமலை ராதாகிருஷ்ணன், பா.ஜ.க., பொதுச்செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.,தனியரசு ஆகியோர்கலந்து கொண்டனர்.

    5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக டெல்லியில் இன்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். #AssemblyPollResults #Modi #BJPMPs
    புதுடெல்லி:

    நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

    தெலுங்கானாவில் மிகப்பெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்ற கனவும் நனவாகிப்போனது. அங்கு முன்பு 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா இந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மிசோரமிலும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அங்கு மிசோரம் தேசிய முன்னணியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

    பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்த 3 மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 62 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்தி பேசும் இந்த 3 பெரிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி பா.ஜனதாவுக்கு வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

    இதன் எதிரொலியாக பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சுமார் 7 மணி நேரம் ஆலோசனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் வாரந்தோறும் கட்சி எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது வழக்கம். இதில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றியே ஆலோசிக்கப்படும்.

    ஆனால் இன்றைய எம்.பி.க்கள் கூட்டத்தில் 5 மாநில தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராவது குறித்து மோடி எம்.பி. க்களுக்கு ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து இன்று மதியம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, கட்சியின் தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட கூட்டம் தான் என்றும், கட்சிரீதியான பிரச்சினைகள் குறித்து தலைவர்களின் கருத்துகளை அமித்ஷா கேட்க இருப்பதாகவும் நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் டுவிட்டரில், “வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி தான். இந்த முடிவுகளால் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், மக்களுக்கு சேவையாற்றுவதிலும், இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதிலும் பா.ஜனதா மேலும் கடுமையாக பாடுபடும். இந்த தேர்தல் முடிவை கட்சி பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது” என்று தெரிவித்து இருந்தார்.  #AssemblyPollResults #Modi #BJPMPs
    வேலூரில் நடந்த தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அமைச்சர் கே.சி.வீரமணி ‘எம்.ஜி.ஆரின் நாளை நமதே’ பாடலை பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி அசத்தினார். #KCVeeramani #ADMK
    வேலூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூரில் நேற்று நடந்தது.



    பொதுக்கூட்ட மேடையில் அமைச்சர் கே.சி. வீரமணி தொண்டர்களை பார்த்து கை அசைத்தப்படி, ‘‘நாளை நமதே, இந்த நாளும் நமதே... தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே... நாளை நமதே, எந்த நாளும் நமதே! தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’’ என்று பாடல் பாடினார்.

    அமைச்சரின் பாடலை கேட்டு தொண்டர்கள் வியந்துபோய் ஆரவாரம் செய்தனர். அமைச்சர் வீரமணி பாடல் பாடிய வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #KCVeeramani #ADMK




    ×