என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்காளத்தில் வன்முறை- முக்கிய குற்றவாளி கைது
    X

    மேற்கு வங்காளத்தில் வன்முறை- முக்கிய குற்றவாளி கைது

    • வன்முறை தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
    • 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர்.

    வக்பு சட்டத்தை எதிர்த்து மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.

    முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஒரு கும்பல் அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

    வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது. வன்முறை தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

    இந்த நிலையில் முர்ஷிதாபாத்தில் தந்தை- மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர் எஜ்நஐ குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×