search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal Violence"

    மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் மற்றும் அவரது மனைவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. அம்மாநிலத்தின் தென் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கச்சராபாரி பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரையும் கலவரக்காரர்கள் எரித்துக் கொன்றுள்ளனர்.

    மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேவபிரசாத் தாஸ் மற்றும் அவருடைய மனைவி உஷா ஆகியோர் எரித்து கொல்லப்பட்டதாக மாவட்ட மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஷமிக் லஹிரி தெரிவித்துள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


    ஷமிக் லஹிரியின் இந்த குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர், மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார். வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுந்தர்வன கடலோர காவல்துறை எஸ்.பி. தெரிவித்துள்ளார்.  #WestBengalPolls #PanchayatElections #WestBengalViolence
    ×