என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பக்தர்கள்"

    • காத்மாண்டு நகரில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • தாக்குலில் பஸ்சில் இருந்த பக்தர்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.

    நமது அண்டை நாடான நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குழுவினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தால் நேபாள தலைநகர் காத்மாண்டு கலவர பூமியாக மாறியது. இதனால் காத்மாண்டு நகரில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் காத்மாண்டுவுக்கு புனித யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பக்தர்கள் குழுவினர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா பஸ்சில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்து கடுமையாக தாக்கியது. அவர்கள் சரமாரியாக கற்களை வீசி பஸ் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இந்த தாக்குலில் பஸ்சில் இருந்த பக்தர்கள் 8 பேர் காயம் அடைந்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகள், மொபைல்போன்கள், ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.

    இதையடுத்து சேதம் அடைந்த சுற்றுலா பஸ் உத்தரபிரதேச மாநில எல்லையான சோனாலிக்கு கொண்டு வரப்பட்டது. அதில் சென்ற பக்தர்கள் அனைவரும் மத்திய அரசு உதவியுடன் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

    நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவலை கொண்டு உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Modi #Mansarovar
    புதுடெல்லி:

    மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நேபாளத்தில் பரிதவிக்கும் இந்திய பக்தர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவலை கொண்டு உள்ளார்.



    இதுகுறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் அவர் தொடர்பு கொண்டு இருக்கிறார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முடிந்தவரை அனைத்து வித உதவிகளை அளிக்குமாறும் அப்போது அவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் யாத்திரை மேற்கொண்ட பக்தர்களுக்கு உதவி செய்வதில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறப்பட்டு உள்ளது.

    மேலும், நேபாளத் தலைநகர் காட்மாண்டு நகரில் உள்ள இந்திய தூதரகம் பக்தர்களை மீட்பதற்காக சிமிகோட் நகருக்கு அனுப்பிய விமானங்கள் தரையிறங்கி உள்ளன.

    மீட்பு நடவடிக்கை படிப்படியாக தீவிரப்படுத்தி வருகிறது என்றும் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்து உள்ளது.  #Modi #Mansarovar #Tamilnews
    ×