search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Buffalo"

    • விவசாய கூட்டுறவு கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது.
    • எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையை ஆளும் என்.ஆர் பி.ஜே.பி கூட்டணி அரசு ஆட்சி அமைத்த போது விவசாய கூட்டுறவு கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது.

    ஆட்சி அமைந்து 2 1/2 ஆண்டு காலம் கடந்த பிறகும் இதுவரை அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் விவசாயிகள் மீண்டும் கடன் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு போரா ட்டங்கள் நடத்தப்பட்டது.

    கடனை தள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்தும், விவசாய கூட்டுறவு கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்கால் கடற்கரை சாலை சிங்காரவேலர் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி காமராஜர் வீதி வழியாக வந்து காமராஜர் நிர்வாக வளாகத்தை வந்தடைந்தது அங்கு எருமை மாட்டுக்கு அகில இந்திய விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

    • திடீரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.
    • லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை-கேரள எல்லைப்பகுதியான ஆனை கட்டி மலைப்பகுதியில் யானைகள், காட்டுமாடுகள், மான்கள், காட்டுபன்றிகள், உள்ளிட்ட பல்வேறு வனவி லங்குகளும், பல்வேறு பறவைகளும் உள்ளன.

    இவைகள் அவ்வப்போது மலைப்பகுதிக்குள் இருந்து வெளியேறி, மலைப்பாதையில் சுற்றி திரிவது வழக்கம்.

    எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகையும் வைத்து உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆனைகட்டி மலைப்பாதையில் டிப்பர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீ ரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.

    பின்னர் அந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து, மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றன.

    காட்டெருமைகள் சாலையை கடக்க முயற்சிப் பதை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார்.

    ஆனால் அதற்குள்ளாகவே லாரி காட்டெருமைகள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஒரு காட்டெருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டெருமை காயத்துடன் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இது குறித்து லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை முடிவடைந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.
    • பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அவிநாசி,ஜூலை.26-

    அவிநாசி, திருப்பூா் சாலை வழியாக கேரளம் வழியாக லாரிகளில் எருமை மாடுகளை ஏற்றி செல்வது வழக்கம்.

    லாரியில் சென்ற எருமை மாடு கட்டப்பட்ட கயிறு துண்டாகி விட்டது. இதன் காரணமாக எருமை மாடு தடுமாறு ஓடும் லாரியிலிருந்து கீேழ விழுந்தது. மிகவும் வேகமாக சென்ற லாரியிலிருந்து கீழே விழந்த சமயம் பின்னால் லாரியை தொடர்ந்து வந்த வாகனங்கள் மோதியதில் எருமை மாடு படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    இதையறிந்த சமூக ஆா்வலா்கள், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கால்நடை மருத்துவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

    இதையடுத்து பொக்லைன் உதவியுடன் அவிநாசி கால்நடை மருத்துவமனைக்கு எருமை மாடு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் எருமை உயிரிழந்தது. 

    • அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
    • சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிற்கு கொண்டு செல்லும் எருமை மாடுகள், லாரிகளில் ஏற்றப்பட்டு நள்ளிரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கிறது.

    அதேபோல, இன்று அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.

    இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபை நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த லாரிகளை மடக்கி சிறை பிடித்தனர்.

    மாடுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அதனை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் செய்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் 4 லாரிகளையும் சோதனையிட்டனர். லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து லாரிகளை மடக்கி பிடித்த இந்து மகா சபை நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எருமை மாடுகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றால், அவைகள் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் லாரி டிரைவர்களிடம் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து இந்து மகா சபா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் எருமை மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீசாரிடம் லாரி டிரைவர்கள் காட்டினர். இதைத்தொடர்ந்து லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • தனக்கு சொந்தமான எருமை மாடுகளை காவிரி ஆற்று பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்தார்.
    • அப்போது அப்பகுதியில் உள்ள சேற்றில் எருமை மாடு சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான எருமை மாடுகளை காவிரி ஆற்று பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள சேற்றில் எருமை மாடு சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.

    இதைபார்த்த கண்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் எருமை மாட்டை மீட்க முயற்சி செய்தார். ஆனால் மாட்டை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து கண்ணன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, சேற்றில் சிக்கிக்கொண்ட எருமை மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • 1 லிட்டர் பால் ரூ.33-க்கு கொள்முதல் செய்து, ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • மாட்டு தீவனங்களின் விலை உயர்வால் மாடுகளை வளர்க்க முடியாமல் அவற்றை விற்பனை செய்து விடுகின்றனர்.

    களக்காடு:

    களக்காட்டில் ஸ்ரீகிருஷ்ணா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (பால் பண்ணை) செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 538 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    6 ஆயிரம் லிட்டர் உற்பத்தி

    கோவில்பத்து, படலை யார்குளம், கருவேலங்குளம், புதூர், ஊச்சிகுளம், கடம்போடுவாழ்வு, பத்மநேரி உள்ளிட்ட 32 இடங்களில் கறவை கூடங்கள் அமைத்து பால் உற்பத்தி செய்து, 18 பணியாளர்கள் மூலம் களக்காடு மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

    உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 லிட்டர் பால் ரூ.33-க்கு கொள்முதல் செய்து, ரூ.40-க்கு விற்பனை செய்து வருகின்றனர். தினசரி 6 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    பருவநிலை மாற்றம்

    இந்நிலையில் சமீபகாலமாக பால் உற்பத்தி குறைந்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் மாடுகளுக்கு பெரியம்மை, தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி வருவதாக கூறப்படுகிறது. அதுபோல மாட்டு தீவனங்களின் விலை உயர்வால் மாடுகளை வளர்க்க முடியாமல் உரிமையாளர்கள் விற்பனை செய்து விடுகின்றனர்.

    இதன் காரணமாக பால் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது பால் உற்பத்தி 6 ஆயிரம் லிட்டரில் இருந்து 5 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பால் உற்பத்தியில் களக்காடு கிருஷ்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.

    கடந்த ஆண்டில் இருந்து இரண்டாமிடத்திற்கு சென்றது. தொடர்ந்து உற்பத்தி குறைந்ததால் பொதுமக்களுக்கு போதியளவு பால் விநியோகம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

    தட்டுப்பாடு

    இதற்கிடையே களக்காட்டில் இருந்து தினசரி 2 ஆயிரம் லிட்டர் நெல்லை ஆவினுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருவதாக தெரிகிறது. மொத்தமுள்ள 5 ஆயிரம் லிட்டரில் 1,200 ஆயிரம் லிட்டர் நெல்லைக்கு அனுப்பி விட்டு எஞ்சிய 3,800 லிட்டர் பால் மட்டுமே களக்காடு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் களக்காடு பகுதியில் பண்ணை பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் பண்ணை பால் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே களக்காடு பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பண்ணை பால் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.
    • காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது.

    இந்த தேயிலை தோட்டங்கள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் உணவு தேடி சுற்றி திரிகின்றன.

    இந்த நிலையில் குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு மேய்ச்சலுக்காக காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. அந்த காட்டெருமைகளுடன் ஒரு குட்டியும் வந்தது.

    காட்டெருமைகள் மேய்ந்து கொண்டே சென்றன. அப்போது எதிர்பாராத விதமாக காட்டெருமை குட்டி தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவித்தது.

    இதனை அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பார்த்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனசரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர், விரைந்து வந்தனர்.

    கம்பி வேலியில் சிக்கி தவித்த காட்டெருமை குட்டியை மீட்டு அதற்கு தேவையான பால் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். பின்னர் குட்டியை தாயுடன் சேர்க்க முடிவு செய்து, தேயிலை ேதாட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.அப்போது சிறிது தொலைவில் காட்டெரு மைகள் கூட்டமாக நிற்பதை பார்த்தனர். இதையடுத்து அருகில் கொண்டு காட்டெருமையை குட்டியை விட்டனர். தாயிடம் காட்டெருமை குட்டி சேரும் வரை அங்கு நின்று கண்காணித்தனர்.குட்டி தாயிடம் சேர்ந்து உற்சாகத்துடன் சென்றதை பார்த்து விட்டு வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

    • எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.
    • கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் விண்டெக்ஸ், குத்தகை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (61). இவரது வீடு, தோட்டம் அதே பகுதியில் உள்ளது.

    தோட்டத்தில் 70 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. அதில் 20 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த கிணறு தடுப்பு சுவர் இல்லாத தரைமட்ட கிணறு ஆகும். இவர் தனது தோட்டத்தில் 8 மாத சினையுடன் கூடிய எருமை ஒன்று வளர்த்து வந்துள்ளார்.

    இந்த எருமை மாடு கிணற்றின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

    உடனடியாக கருப்புசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் நவீன்தரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பார்த்த பொழுது எருமை மாடு தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.

    கயிறு கட்டி மீட்டால் எருமை மாடு உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் பத்திரமாக மீட்க முயற்சி செய்தனர். அதன்படி கிரேன் வரவழைக்கப்பட்டு எருமை மாட்டை பத்திரமாக மீட்டனர்.

    எருமையை தொலைத்ததாக கூறியவர் புகார் அளித்து உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கும் கடிதம் எழுதினார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அகமதுகர் கிராமத்தில் வசிப்பவர் சந்திரபால் காஷ்யாப். இவரது எருமைகளில் ஈன்ற கன்றுக்குட்டி ஒன்று, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி காணாமல் போனது. இதையடுத்து அவர் பல இடங்களில்  தனது எருமைக்கன்றை தேடி அலைந்துள்ளார். இறுதியொல் அவர் அவரது கிராமத்திற்கு அருகே இருந்த சஹரான்பூரின் பீன்பூர் என்ற கிராமத்தில் சத்வீர் என்பவரிடம் ஒரு எருமைக்கன்று இருப்பதை கண்டறிந்தார்.

    அந்த எருமைக்கன்று தன்னுடையது என்று சந்திரபால் உரிமைக்கொண்டாடியுள்ளார். ஆனால் சத்வீர் எருமை கன்றை தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

    இது குறித்து சந்திரபால் பீன்பூர் கிராமப் பஞ்சாயத்து, அப்பகுதி காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் செய்துள்ளார். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சந்திரபால், ஷாம்லி மாவட்ட எஸ்.பி. சுக்ரிதி மஹாதேவிடம் எருமையை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தார். மேலும் தான் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அனுப்பிய புகாரின் நகலையும் அளித்துள்ளார். 


    இதையடுத்து, எஸ்பி சுக்ரிதி, டி.என்.ஏ. சோதனை செய்து உண்மையை கண்டறியுமாறு ஷாம்லி மாவட்ட அரசு கால்நடை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பீன்பூர் வந்த கால்நடை மருத்துவர்கள் டி.என்.ஏ. சோதனைக்காக சாம்பிளை எருமைக்கன்றிடம் எடுத்துச் சென்றுள்ளனர். 

    இதை சந்திரபாலிடம் உள்ள தாய் எருமையின் டிஎன்ஏவுடன் பொருத்திப் பார்த்து உண்மை அறியப்பட உள்ளது.
    மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் எருமை மாடு ஒன்று குட்டி ஈன்றுவிட்டது. இதையறிந்த மாட்டின் உரிமையாளர், கன்றுக்குட்டியை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து வீட்டுக்கு தூக்கிச்சென்றார்.
    பூந்தமல்லி :

    சென்னை போரூரை சேர்ந்தவர் பிரசாந்த் மோகன். இவர், சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் இவரது எருமை மாடு ஒன்று குட்டி ஈன்றுவிட்டது. இதையறிந்த மாட்டின் உரிமையாளர், கன்றுக்குட்டியை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து வீட்டுக்கு தூக்கிச்சென்றார்.

    இதைக்கண்ட அந்த எருமை மாடு, தனது கன்று குட்டியை பிரிய மனமின்றி உரிமையாளர் மோட்டார்சைக்கிளில் தூக்கிச்சென்ற தனது குட்டியின் பின்னால் ஓடியே சென்றது. மோட்டார்சைக்கிள் வேகமாக செல்லும் இடங்களில் வேகமாகவும், மெதுவாக செல்லும் இடங்களில் மெதுவாகவும் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனது கன்றுகுட்டி பின்தொடர்ந்தபடி ஓடிச்சென்ற எருமை மாட்டின் தாய் பாசத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
    கொடைக்கானலில் நகரப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பெர்ன்ஹில் ரோடு பகுதியில் ஒரு குடியிருப்புக்குள் நுழைந்த காட்டெருமை அங்குள்ள புற்களை மேய்ந்ததோடு மலர்ச்செடிகளையும் மிதித்து நாசம் செய்தது. இந்த ஒரு காட்டெருமை மட்டும் அடிக்கடி இந்த பகுதியில் நுழைந்து பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் வனத்துறையினர் இதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.கொடைக்கானல் வனப்பகுதியில் புல்வெளியை உருவாக்கி வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறாமல் செய்வதில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    துவரங்குறிச்சி அருகே காட்டெருமை மீது சொகுசு பஸ் மோதி கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மணப்பாறை:

    சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று 30 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி வனத்துறை அலுவலகம் எதிரே சென்றது. அப்போது பெரியமலை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்தது. அப்போது வேகமாக வந்த சொகுசு பஸ் அந்த காட்டெருமை மீது மோதியது.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் அதில் பயணம் செய்த சிட்லப்பாக்கத்தை சேர்ந்த பிச்சம்மாள் (வயது 80), சென்னையை சேர்ந்த மாருதிஜென் (34), நெல்லையை சேர்ந்த சத்தியதாஸ் (54), சரத்குமார் (22), பிரசாத் (28), உஷா (46), செல்லதுரை (40), சண்முகம் (64), அனிதா (28), போஸ் (44) ஆகிய 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    மேலும் விபத்தில் சிக்கிய காட்டெருமையும் சம்பவ இடத்திலேயே இறந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை காப்பாற்றி திருச்சி, மணப்பாறை, துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத் திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    துவரங்குறிச்சியை ஒட்டியுள்ள பெரியமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் தேடி வனத்தில் இருந்து நகர பகுதிக்கு வருவதும், இது போன்ற விபத்தில் சிக்கி பலியாவதும் அடிக்கடி நடந்து வருகிறது.

    எனவே இதனை தடுக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    ×