search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆனைகட்டி மலைப்பகுதியில் லாரி மோதி காட்டெருமை உயிரிழப்பு
    X

    ஆனைகட்டி மலைப்பகுதியில் லாரி மோதி காட்டெருமை உயிரிழப்பு

    • திடீரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.
    • லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை-கேரள எல்லைப்பகுதியான ஆனை கட்டி மலைப்பகுதியில் யானைகள், காட்டுமாடுகள், மான்கள், காட்டுபன்றிகள், உள்ளிட்ட பல்வேறு வனவி லங்குகளும், பல்வேறு பறவைகளும் உள்ளன.

    இவைகள் அவ்வப்போது மலைப்பகுதிக்குள் இருந்து வெளியேறி, மலைப்பாதையில் சுற்றி திரிவது வழக்கம்.

    எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் எச்சரிக்கை பலகையும் வைத்து உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆனைகட்டி மலைப்பாதையில் டிப்பர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீ ரென வனப்பகுதியில் இருந்து 2 காட்டெருமைகள் வெளியேறின.

    பின்னர் அந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்து, மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றன.

    காட்டெருமைகள் சாலையை கடக்க முயற்சிப் பதை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார்.

    ஆனால் அதற்குள்ளாகவே லாரி காட்டெருமைகள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஒரு காட்டெருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு காட்டெருமை காயத்துடன் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இது குறித்து லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், லாரி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டு மாடு கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை முடிவடைந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×