பொருட்காட்சியில் ராட்டினம் உடைந்து விபத்து.. மக்களை காக்க முயன்ற போலீஸ் அதிகாரி பலி - 13 பேர் படுகாயம்

ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்தபோது ராட்டினத்தின் பகுதி அவர் தலையில் இடித்தது. விபத்து நடந்த சமயம் மக்கள் சிதறி ஓடியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொருட்காட்சியில் ராட்டினம் உடைந்து விபத்து.. மக்களை காக்க முயன்ற போலீஸ் அதிகாரி பலி - 13 பேர் படுகாயம்
Published on

அரியானா மாநிலம் பரிதாபாத், சூரஜ்குண்ட்-இல் பொருட்காட்சி மேளா நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மேளாவில் ராட்சத ராட்டினம் திடீரென நடுப்பகுதியில் உடைந்து விழுந்தது. ராட்டினம் உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததால், அதில் இருந்தவர்கள் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

அவர் ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்தபோது ராட்டினத்தின் பகுதி அவர் தலையில் இடித்தால் படுகாயமடைந்துய் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேளாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் விபத்து நடந்த சமயம் மக்கள் சிதறி ஓடியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இந்த விபத்திற்குக் காரணம் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com