என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விருத்தாசலம் அருகே கார் மோதி 3 பேர் உயிரிழப்பு
- விபத்தில் உயிரிழந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேல் நாரியப்பனூரில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






