என் மலர்
நீங்கள் தேடியது "ஓட்டுநர் கைது"
- பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பேருந்தை இயக்குவதற்கு முன்பாக உரிய முறையில் சோதனை செய்யத் தவறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நடிகர் பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கி விட்டுவிட்டு திரும்பும் வழியில் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் மது அருந்தி உள்ளார்.
- பாபு சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டார். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கி விட்டுவிட்டு திரும்பும் வழியில் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் மது அருந்தி உள்ளார்.
பின்னர் அவர் மதுபோதையில் காரை இயக்கியதால் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் நேற்று விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். 6 வாகனங்கள் சேதம் அடைந்தன.
இதையடுத்து பாபு சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டார். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாபு சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் புஷ்பராஜை வரும் 30-ந்தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
- விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கியபோது, சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை பகுதியில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் விபத்தில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் பாஸ்கரை திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.






