search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car driver arrested"

    • சம்பவத்தன்று தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டில் புகுந்து தனது திட்டத்தை நிறை வேற்றினார்.
    • 34 பவுன் தங்ககட்டி, வெள்ளி குத்துவிளக்கு என 5 கிலோ வெள்ளிபொருட்கள், தங்கபொருட்களை உருக்க பயன்படுத்திய எந்திரம், கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    பழனி:

    பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார்(55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் சென்னையில் டாக்டருக்கு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளை பார்க்க ரேவதி சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் உதயகுமார் மட்டும் தனியாக இருந்த நிலையில் மர்மநபர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டிற்குள் புகுந்தனர்.

    பின்னர் உதயகுமாரை கத்தியால் குத்தி பீரோவில் இருந்த 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். படுகாயமடைந்த உதயகுமார் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து 4 தனிப்படைகள் அமைக்க ப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் டாக்டர் வீட்டில் கொள்ளையடி த்தது பழனி பெரிய கடை வீதியை சேர்ந்த ராஜாராம் மகன் சரவணக்குமார்(41) என தெரியவந்தது. இவர் அமரப்பூண்டியில் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் உதயகுமார் வீட்டில் 10 நாட்கள் டிரைவராக வேலை பார்த்து ள்ளார். அப்போது டாக்டர் வீட்டில் நகை, பணம் அதிகளவில் இருப்பதை உறுதி செய்தார். இதனால் இவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டில் புகுந்து தனது திட்டத்தை நிறை வேற்றினார். அதன்பின்னர் கோழிப்பண்ணைக்கு வந்து கூட்டாளிகளுக்கு சேர வேண்டிய தொகையை கொடுத்துவிட்டு தனது பங்கை எடுத்துக்கொ ண்டார்.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கி பிஸ்கட்டாக மாற்றினார். அவரிடமிருந்து 34 பவுன் தங்ககட்டி, வெள்ளி குத்துவிளக்கு என 5 கிலோ வெள்ளிபொருட்கள், தங்கபொருட்களை உருக்க பயன்படுத்திய எந்திரம், கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். இக்கொள்ளை வழக்கில் தொர்புடைய சரவண க்குமாரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    வில்லியனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சப்-இன்ஸ் பெக்டர்கள் குமார், நந்தகுமார் மற்றும் போலீஸ் காரர்கள் ஞானசேகர், அய்யனார் ஆகியோர் வில்லியனூர் கூடப்பாக்கம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது பட்டாணிகளம் ரெயில்வே கேட் பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது.

    அவரது சொந்த ஊர் வில்லியனூரை அடுத்த கணுவாப்பேட்டையை சேர்ந்த ரவி (வயது 38) என்பதும், இவர் கார் டிரைவராக இருப்பதும் தெரியவந்தது. ரவியை போலீசார் கைது செய்தனர். 

    அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.24 ஆயிரத்து 140 மற்றும் செல்போன், லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர். இவரிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் விழுப்புரத்தை அடுத்த பள்ளித்தென்னல் பகுதியை சேர்ந்த கார்த்தீபன் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்தீபனை தேடி வருகின்றனர்.
    தனியார் பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொரட்டூரை சேர்ந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    திருவான்மியூர்:

    ஈரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம். தனியார் பால் நிறுவன உரிமையாளர். வியாபாரத்தை விரிவுபடுத்த இவருக்கு ரூ.50 கோடி தேவைப்பட்டது.

    அதற்காக சிலரை அணுகிய போது பாங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சென்னை வரவழைத்தனர். பட்டினபாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் 3 பேர் அவரை சந்தித்து பேசினர். அப்போது கடன்பெற்று தர ரூ.1 கோடி தேவைப்படும் என கூறி அதை பெற்றுக் கொண்டனர்.

    காரில் வந்த அவர்கள் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி அங்கிருந்து பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.

    பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மோகன சுந்தரம் போலீசில் புகார் செய்தார். அதைதொடர்ந்து போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கொரட்டூரை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார் (40) கைது செய்யப்பட்டார். இவர் கொள்ளை கும்பலுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ×