என் மலர்
நீங்கள் தேடியது "lottery ticket sale"
- சிதம்பரம் நகர போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது,
- லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் கைதுசெய்தனர்,
கடலூர்:
சிதம்பரம் நகர போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் பேருந்து நிலையம், பூதக்கேணி, ஈபி இறக்கம் என பல்வேறு முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு சம்பவ இடங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை விசாரணை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்து உள்ளார்கள். விசாரணையில் சிதம்பரம் பாரதிநகர் சி.கொத்தங்குடி பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ஐயப்பன் (வயது37) , பூதகேணி பகுதியை சேர்ந்த அப்துல்மஜீத் மகன் அன்வர்தீன் (63), அதே பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ராமன் மகன் நாகசுந்தரம் (65) ஆகியோரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மொத்தம் 5 லாட்டரி சீட்டுகள்,2 பில் புக், ரொக்கம் ரூ. 2100 பறிமுதல் செய்தனர்.
- பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அவர் அங்கு செட்டிபாளையம் யுவராஜ் (39)என தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டிபோலீஸ்லைன்5 -வது தெருவில் செல்போனில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தஒருவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர் அங்கு செட்டிபாளையம் யுவராஜ் (39)என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.






