search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி -  பாரூர் பகுதியில் லாட்டரி விற்ற 4 பேர் கைது- ரூ.22 ஆயிரம் பறிமுதல்
    X

    போச்சம்பள்ளி - பாரூர் பகுதியில் லாட்டரி விற்ற 4 பேர் கைது- ரூ.22 ஆயிரம் பறிமுதல்

    போச்சம்பள்ளி மற்றும் பாரூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்ற 4 பேரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி  மவாட்டம், போச்சம்பள்ளி மற்றும் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் மணி, ராஜா மற்றும் போலீசார் போச்சம்பள்ளி பஸ்நிலையம், அரசம்பட்டி பஸ் ஸ்டாப் போன்ற பகுதியில் ரோந்து சென்றனர்.
     
    அப்போது அந்த பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்றுகொண்டிருந்த குள்ளம்பட்டி செல்வ குமார்(34), சுரேஷ்குமார்(36), வாடமங்கலம் சக்தி (35), சாம்ராஜ் (35) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரனை செய்தனர். விசாரணையில் லாட்டரி விற்பனை செய்வது தெரியவந்தது.  

    இதில் சக்தி என்பவர் அரசம்பட்டியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கம்ப்யூட்டர் மூலம் லாட்டரி சீட்டை பிரிண்ட் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.21 ஆயிரத்து 670-யை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×