search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் கார் டிரைவர் கைது
    X

    கைப்பற்றப்பட்ட வெள்ளிபொருட்கள்.


    பழனியில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் கார் டிரைவர் கைது

    • சம்பவத்தன்று தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டில் புகுந்து தனது திட்டத்தை நிறை வேற்றினார்.
    • 34 பவுன் தங்ககட்டி, வெள்ளி குத்துவிளக்கு என 5 கிலோ வெள்ளிபொருட்கள், தங்கபொருட்களை உருக்க பயன்படுத்திய எந்திரம், கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    பழனி:

    பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார்(55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் சென்னையில் டாக்டருக்கு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளை பார்க்க ரேவதி சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் உதயகுமார் மட்டும் தனியாக இருந்த நிலையில் மர்மநபர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டிற்குள் புகுந்தனர்.

    பின்னர் உதயகுமாரை கத்தியால் குத்தி பீரோவில் இருந்த 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். படுகாயமடைந்த உதயகுமார் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து 4 தனிப்படைகள் அமைக்க ப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் டாக்டர் வீட்டில் கொள்ளையடி த்தது பழனி பெரிய கடை வீதியை சேர்ந்த ராஜாராம் மகன் சரவணக்குமார்(41) என தெரியவந்தது. இவர் அமரப்பூண்டியில் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் உதயகுமார் வீட்டில் 10 நாட்கள் டிரைவராக வேலை பார்த்து ள்ளார். அப்போது டாக்டர் வீட்டில் நகை, பணம் அதிகளவில் இருப்பதை உறுதி செய்தார். இதனால் இவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டில் புகுந்து தனது திட்டத்தை நிறை வேற்றினார். அதன்பின்னர் கோழிப்பண்ணைக்கு வந்து கூட்டாளிகளுக்கு சேர வேண்டிய தொகையை கொடுத்துவிட்டு தனது பங்கை எடுத்துக்கொ ண்டார்.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கி பிஸ்கட்டாக மாற்றினார். அவரிடமிருந்து 34 பவுன் தங்ககட்டி, வெள்ளி குத்துவிளக்கு என 5 கிலோ வெள்ளிபொருட்கள், தங்கபொருட்களை உருக்க பயன்படுத்திய எந்திரம், கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். இக்கொள்ளை வழக்கில் தொர்புடைய சரவண க்குமாரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×