search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெடிலம் ஆற்றில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 2 பேர் உயிர் தப்பினர்
    X

    கெடிலம் ஆற்றில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 2 பேர் உயிர் தப்பினர்

    • தறிகெட்டு ஓடிய கார் கெடிலம் ஆற்றில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு சென்றனர்.
    • விபத்து குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் போலீஸ் சரகம் நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சபாபதி (வயது 35). இவர் நேற்று இரவு காரில் கடலூர் கம்மியம்பேட்டை ஜவான்பவன் இணைப்பு சாலை வழியாக கெடிலம் ஆற்றங்கரையில் சென்றுகொண்டிருந்தார். காசிவிஸ்வநாதீஸ்வரர் கோவில் அருகே வளைவில் சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    தறிகெட்டு ஓடிய கார் கெடிலம் ஆற்றில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு சென்றனர். விபத்தில் சிக்கிய சபாபதி, அவரது நண்பர் சஞ்சய்காந்தி ஆகியோரை மீட்டனர். இவர்கள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×