search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murder of husband"

    • மதுரை அருகே கணவனை கொன்ற வழக்கில் தனிப்படை போலீசார் பெண்ணை தேடி வருகின்றனர்.
    • உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.

    திருப்பரங்குன்றம்

    தனக்கன்குளம் திருவள்ளு வர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை(51). இவரது மனைவி அன்னலட்சுமி(48). இவர்களது மகன்கள் சுந்தர பாரதி, ராஜ்குமார். சர்க்கரை அ.ம.மு.க.வில் பகுதி செயலாளராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். சர்க்கரை நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தலையில் கல்லை போட்டும், உடலில் கொதிக்கும் சுடுநீரை ஊற்றியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தார்.

    இதில் சர்க்கரை பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்க்கரையின் மகன்கள் சுந்தர பாரதி மற்றும் ராஜ்குமாரை சந்தேகத்தின் போது காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அன்னலட்சுமி மட்டுமே கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×