என் மலர்
நீங்கள் தேடியது "Pakistan Fan"
- முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
- இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் ரசிகர் பாடியது இந்தியர்களை நெகிழ வைத்தது.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை இந்திய வீராங்கனைகள் வென்றதை, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், அர்ஷத் என்ற நபர் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்சியை அணிந்தபடி இந்திய மகளிர் அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
அதில், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் எழுந்து நின்று இந்திய தேசிய கீதத்தைப் பாடியது இந்திய ரசிகர்களை உண்மையிலேயே நெகிழ வைத்தது.
அர்ஷத்தின் இந்த செயல், இருநாட்டு எல்லைகளை கடந்து இதயங்களை இணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
- பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட வேண்டாம் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- காவல்துறை அதிகாரியை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உலகக் கோப்பை போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகரை "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷமிட வேண்டாம் என்று கூறி ஒரு போலீஸ் அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த ரசிகர் 'இந்திய ரசிகர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிடும்போது, நான் ஏன் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட கூடாது?' என்று கேட்டார்.
அதற்கு அதிகாரி மீண்டும் 'அப்படி சொல்லகூடாதுதான்' என கூறினார்.
உடனே அந்த ரசிகர் அந்த அதிகாரியின் பதிலை தனது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்ய முயற்சித்தார். மேலும் அந்த ரசிகர், "பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா போட்டியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நான் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்ல கூடாதா?" என மீண்டும் கேட்டார். இதற்கு பதில் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு போலீஸ் அதிகாரி நகர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தனது நாட்டு அணியினரை உற்சாகப்படுத்த ஒரு ரசிகர் அனுமதிக்கப்படாதது "வெட்கக்கேடானது" என்று அந்த காவல்துறை அதிகாரியை கடுமையாக சாடி வருகின்றனர்.
- கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க ரசிகை வந்திருந்தார்.
- கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
உலக கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகை ஒருவர், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் படம் மற்றும் அவரது ஜெர்சி எண் 18 ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் அணிந்திருந்த செயின் (லாக்கெட்) இணையத்தில் வைரலானது. அவரது படத்துடன் வைரலான வீடியோவில், நியூயார்க் மைதானத்தில் விராட் கோலியின் படத்துடன் கூடிய லாக்கெட்டை கழுத்தில் அணிந்திருந்த பாகிஸ்தான் ரசிகை என பதிவிடப்பட்டிருந்தது.
இந்த ரசிகை ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளையும் நான் ஆதரிக்கிறேன் என அவர் பேட்டி அளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் கோலி படத்துடன் கூடிய லாக்கெட்டை அணிந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
Pakistani girl wearing Virat Kohli's pendant despite him being their biggest nightmare pic.twitter.com/PZCqjSWLr9
— Pari (@BluntIndianGal) June 9, 2024






