search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
    X

    விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

    குளச்சல் துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

    • காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
    • மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத்தில் இருந்து சுமார் 300 விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் 45 கி.மீ.முதல் 55 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், 11 மற்றும் 12-ந் தேதிகளில் 65 கி.மீ. அளவிற்கு வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த தகவல் குமரி மாவட்ட அனைத்து கட லோர மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்றும் பெரும்பாலான விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன. இவற்றுள் குறை வான மீன்களே கிடைத்தன.குளச்சலில் நேற்று மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×