என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
இரணியல் அருகே குழந்தையுடன் தாய் மாயம்
- கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார்.
- இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே நுள்ளிவிளையை அடுத்த மூலச்சன்விளையை சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவரது மனைவி சிந்து (25). இவர்களுக்கு ரெஜன் (2) என்ற மகன் உள்ளான்.
கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிந்து வடக்கு நுள்ளிவிளையில் உள்ள அவரது தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19-ந்தேதி தாய் வீட்டில் இருந்த சிந்துவை குழந்தையுடன் காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிந்துவின் தாயார் ராணி இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்துவையும், அவரது மகனையும் தேடி வருகின்றனர்.
Next Story






