என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில்பட்டி அருகே மனநல காப்பகத்திற்கு பள்ளி மாணவ- மாணவிகள் பொருள் உதவி
Byமாலை மலர்23 March 2023 8:54 AM GMT
- கோவில்பட்டி அருகே உள்ள பெண்கள் மனநல காப்பகத்திற்கு காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிரி.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகள் வந்தனர்.
- அப்போது மாணவ, மாணவிகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் மனநல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீட்டான்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் பெண்கள் மனநல காப்பகத்திற்கு காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிரி.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகள் வந்தனர்.
அப்போது மாணவ, மாணவிகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் மனநல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உடைகள், பாய், மளிகை சாமான், பிஸ்கட் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினர். இதேபோல் செம்புதூரில் உள்ள ஆக்டிவ் மைண்ட் ஆண்கள் மனநல காப்பகத்திற்கு வந்திருந்து அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கினர். பள்ளி முதல்வர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து காப்பக நிர்வாகி தேன்ராஜா மற்றும் ஊழியர் அந்தோணி ரோசி அவர்களிடம் பொருட்களை வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X