என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கோப்புபடம். 

    பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    • பள்ளி வகுப்பறையில் இருக்கையில் இடம் பிடிப்பதில் சக மாணவர்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
    • பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றதும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பெருமாநல்லூர் நியூகாளிபாளையம் ஜி.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் பனியன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மகன் சுதர்சன் (வயது 14). பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில் இருக்கையில் இடம் பிடிப்பதில் சக மாணவர்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சுதர்சனின் கண் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெற்றோருக்கு தெரிந்தால் சத்தம் போடுவார்கள் என்று பயந்த சுதர்சன், பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றதும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×