search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளஸ்-2 மாணவன் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?: போலீசார் விசாரணை
    X

    பிளஸ்-2 மாணவன் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?: போலீசார் விசாரணை

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் செக்கடிப்பட்டி அர்ஜுன தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். இவரது மகன் விஷ்வா (வயது 17).

    நாகராஜன் குடும்பத்துடன் மும்பையில் வேலை செய்து வருகிறார். இதனால் விஷ்வா தனது தாத்தாவான கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார்.

    பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவர் பிளஸ்-2 படித்து வந்தார். பெத்தநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள தனது அத்தை மணி வீட்டிலும் தங்கி அவ்வப்போது பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவரது அத்தை வீட்டில் அருகில் வசிக்கும் பெண்ணும் விஷ்வாவும் காதலித்து வந்துள்ளார்கள்.

    இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண் விஷ்வாவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் விஷ்வா செக்கடிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் சேலையில் தூக்கு போட்டுக்கொண்டார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பேளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஷ்வா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஷ்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேசாததால் விஷ்வா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×