search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை- கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்க முயற்சி
    X

    பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை- கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்க முயற்சி

    • பஸ் அங்கிருந்து கிளம்பும்போது மாணவர்கள் பீர் பாட்டிலை பஸ் மீது வீசி எறிந்துள்ளனர்.
    • தன்னை தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

    ராயபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 39). பஸ் கண்டக்டர். தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் தயானந்த மூர்த்தி (வயது 57). பஸ் டிரைவர். தண்டையார்பேட்டை பஸ் டிப்போவை சேர்ந்த பஸ் நேற்று தடம் எண் 44 கட் பிராட்வேயில் இருந்து ஐ.ஓ.சி. வரை செல்லும் பஸ்சில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் ஏறிய 5 பள்ளி மாணவர்கள் பஸ்சில் பின்புற படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு தொல்லை கொடுத்து ரகளை செய்துள்ளனர்.

    பின்னர் பஸ் தண்டையார்பேட்டை மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் பள்ளி மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் அதில் ஒரு மாணவன் சாலையில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து கண்டக்டரை தாக்க முயன்றார். அப்போது கண்டக்டர் அதைத் தடுத்துள்ளார். மேலும், பஸ் அங்கிருந்து கிளம்பும்போது மாணவர்கள் பீர் பாட்டிலை பஸ் மீது வீசி எறிந்துள்ளனர்.

    இது தொடர்பாக கண்டக்டர் தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் எதிரே பஸ்சை நிறுத்தி கண்டக்டர் அதன் முன் நின்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து கண்டக்டர் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தன்னை தாக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×