என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unseasonal rain"

    • தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.
    • வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து ஆற்றில் வந்த நீரை வைத்து விவசாயிகள் நெல்நடவு செய்து, போதிய உரமிட்டு வளர்த்து எடுத்துள்ளனர். இதற்காக ஏக்கருக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.

    தற்சமயம் இந்தக் குறுவை நெற்பயிர்கள் சராசரியாக 40 நாட்கள் வயதுடைய இளம் பயிராக வளர்ந்துள்ளது.

    இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று மதியம் வரை பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

    பருவம் தவறிய இந்த மழையால் திருவாரூர் அருகே உள்ள பழையவலம், தென்ஓடாச்சேரி கானூர், கள்ளிக்குடி, அலிவலம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.

    வயலில் தேங்கி உள்ள மழைநீரை வடிய வைக்க வடிகால்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேநிலை தொடர்ந்தால் இளம் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைப்ப தற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர்
    • அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

    கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதும், சம்பா மற்றும் குறுவை, தாளடி நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் பிறகு உளுந்து பயறு மற்றும் வரப்பு உளுந்து சாகுபடிகளை செய்து வருகின்றனர்.

    இத்தகைய சாகுபடி பணிகளுக்கு பிறகு, மாற்று பயிராக பருத்தி சாகுபடி பணிகளை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    என்றாலும், ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு முதல் அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

    அதேபோல, நடப்பு ஆண்டில் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள், வயல்களில் பருத்தி பயிர்கள் இட்டனர்.

    அப்போது, சிறு பயிர்களாக பருத்தி பயிர்கள் இருந்த போது, பருவம் தவறிய மழையால், அவைகள் சேதமாயின.

    அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

    தற்போது, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் எந்திரம் மூலம் பாத்திகட்டும் பணிகள் மற்றும் களைகள் அகற்றும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் பருத்தி சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ×