என் மலர்
நீங்கள் தேடியது "field Inspection"
- திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
- பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக 9-ந்தேதி காலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுக்கிறார்.
மாலை அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அங்கு நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.
9-ந்தேதி இரவு திருவாரூரில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10-ந்தேதி காலை திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- கிராமங்களில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் முயற்சி நடந்தது.
- கள ஆய்வில் 46 மாணவ மாணவிகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வழிகாட்டுதலின்படியும் உதவி திட்ட அலுவலர் பெர்சியால் ஞானமணி, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆகியோரின் ஆலோசனையின் படி கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் முயற்சி நடந்தது.
இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் கென்னடி, வட்டார கல்வி அலுவலர் செல்வகுமார், மரிய ஜெயசீலா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்சிநர்கள் சிவசங்கரி, பிபேகம், வெயிலுமுத்து, சிறப்பாசிரியர்கள் கிரேனா, காளியம்மாள், கலைச்செல்வி, நிஷாமேரி, ஜான்சிராணி, தலைமை ஆசிரியர்கள் பேச்சியம்மாள், பிரேமகுமாரி ஆகியோர் கருங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுப்பு நடத்தி மாணவர்களை பள்ளியில் சேர்த்தனர். இந்த கள ஆய்வில் 46 மாணவ மாணவிகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.






