என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவாரூர் தேரை குறிப்பிட்டு தி.மு.க. அரசை விமர்சித்த விஜய்
- தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.
- உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார்.
திருவாரூில் பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் விவசாயிகளை ஆதரிக்கும் விதமாக தோளில் பச்சை துண்டு அணிந்து வந்தார்.
அதன்பிறகு, தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய்," திருவாரூர் தியாகராஜன் கோவில், திருவாரூர் தேர் தான் நியாபகம் வரும், திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம் என்றார்.
இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-
நீண்ட நாள் ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை இயக்கியது நான் தான் என பெருமை தட்டியவர் யார் என உங்களுக்கு தெரியும்.
ரொம்ப நாளா ஓடாம இருந்த தேரை ஓடவைத்ததாக மார்தட்டிக் கொள்கிறார். அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறார்.
அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.
திருவாரூர் மாவட்டம் தங்களின் சொந்த மாவட்டம் என சொல்லிக் கொள்பவர் கருவாடாக காய்வதை கண்டு கொள்ளவில்லை.
எல்லா இடத்திற்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீர்கள், உங்கள் அப்பா பிறந்த இந்த திருவாரூரில் ஒரு அடிப்படை சாலை வசதி இல்லை.
உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார். திருவாரூரில் உள்ள மெடிக்கல் கல்லூரி தான் வைத்தியம் பார்க்கும் நிலையைில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






