search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Customs Fees"

    • நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை.
    • தூத்துக்குடியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி இம்மாதம் (டிசம்பர்) 31ம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவாரியான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    ×