search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    வண்ணார்பேட்டையில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    நெல்லையில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

    • ஓய்வூதியோர் சங்கத்தின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியோர் சங்கத்தின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோமதிநாயகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் நிர்வாகிகள் பேராட்சி கோபாலன், பார்த்த சாரதி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் உள்ள குறைபாடுகளை களைந்து ஓய்வூதியர்கள், அவர்களது குடும்பத்தினர்களுக்கு அனைத்து நோய்களுக்கான செலவினங்களை அரசே ஏற்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரெயில் கட்டணம் மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×