search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP members"

    • பா.ஜ.க. சார்பாக மாநிலம் முழுவதும் 10000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • போலீசார் தடுத்ததால் ஆத்திரமடைந்த பா.ஜ.வினர் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலையின் சென்னை வீட்டின் முன்பு நடப்பட்ட கட்சியின் கொடி க்கம்பம் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொட ர்ந்து மாநிலம் முழுவதும் 10000-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்ப டும் என தெரிவித்திருந்தார்.

    அதன்படி பெரியகுளம் அருகே ஏ.புதுப்பட்டி பகுதியில் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்த லைவருமான ராஜ பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். கொடிக்கம்பம் நட அனுமதி இல்லாததால் அவர்களை போலீசார் கலைந்து போகுமாறு கூறினர்.

    அதற்கு எதிர்ப்பு தெரி வித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜ பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.வினர் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. வினரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்ற தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்
    • விவசாயி உயிரிழந்த சம்பவத்தில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காசங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செம்புலிங்கம் (வயது 52). விவசாயி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் செம்புலிங்கத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி செந்துறை ஒன்றிய பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை செல்ல விடாமல் செந்துறை போலீசார் வழிமறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் செந்துறை பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

    • மாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுததியில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • அண்ணாமலையை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலையை கைது செய்ததை கண்டித்து, குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுததியில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அண்ணாமலையை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சரவணராஜன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கடலூரில் பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜக எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் தலைமையில் நிர்வாகிகள் காரைக்கண்ணன், வெற்றிவேல், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல், சுரேஷ் பிச்சை பிள்ளை, அக்னி கிருஷ்ணமூர்த்தி, மேகநாதன், விஜி, வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் திடீரென்று சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கூறுகையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் சாதி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சமூகத்தை இழிவு படுத்தும் விதமாக உள்ளது. 

    ஆகையால் ஜாதி வன்கொடுமையின் கீழ் மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, வினாத்தாள் தயார் செய்த பல்கலைக்கழக பேராசிரியர் மீதும் துணைவேந்தர் மீதும் சட்டப்படி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை ஈடுபட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பாக காணப்பட்டது.

    • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலை மையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • பா.ஜ.க. பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாடு சிலை அருகில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வை கண்டித்து தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மொடக்குறிச்சி சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோட்ட பொறுப்பாளர் பாயிண்ட் மணி கண்டன உரையாற்றினார்.

    இதில் முன்னாள் எம்.பி. சவுந்தரம், மகளிர் அணி மாநில பொது செயலாளர் மோகனப்பிரியா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார், பொது செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், வேதானந்தம், சிவகாமி மகேஷ்வரன், ஈஸ்வரமூர்த்தி, மகளிர் அணி தலைவர் புனிதம்,

    மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னதுரை, தங்கராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, பட்டியல் அணி மாநில துணை செயலாளர் அய்யாசாமி, கலை இலக்கிய பிரிவு தலைவர் சக்திசுப்பிரமணி,

    மத்திய அரசாங்க மக்கள் நலதிட்டங்கள் பிரிவு மாவட்ட தலைவர் பி.எஸ்.செல்வமணி, முன்னாள் வர்த்தக அணி நிர்வாகிகள் செல்வகுமார், தீபம்ராஜா, அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் சரவணன், துனை தலைவர் ரவிந்தரன், மாவட்ட செயலாளர் குமரகுரு, இந்திரகுமார், ஊடக பிரிவு அண்ணாதுரை உள்பட பா.ஜ.க. பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

    • மதுரையில் இன்று பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    • தி.மு.க அரசை கண்டித்து தமிழகமெங்கும் இன்று நடந்தது.

    மதுரை

    பா.ஜ.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து தமிழகமெங்கும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மதுரை மாநகர் மாவட்டத்தில், மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் வக்கீல் பிரிவு மாநிலத்தலைவர் வணங்காமுடி, மாநில பொருளாதாரபிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர்.

    இந்த போராட்டத்தில் பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், நிர்வாகிகள், அணி பிரிவு தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×