என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribal Women"

    • பழங்குடியின மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
    • அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் "தனித்திறமையை வளர்த்து முன்னேற்றத்தை விரிவுபடுத்துங்கள்" என்கிற வாசகத்தை மையமாக கொண்டு, கோத்தகிரி குஞ்சப்பனை இருளர் பழங்குடியின கிராமத்தில், கலெக்டர் அருணா தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலெக்டர் அருணா மற்றும் கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

    பின்னர் பழங்குடியின மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இதில் மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீனாதேவி, கோத்தகிரி தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 

    • வறுமையை சமாளிக்க அதிரடி முடிவு என்கிறார்கள்.
    • குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என மாமியார் அறிவுறுத்தி உள்ளார்.

    இமாச்சல பிரதேசத்தில் ஹட்டி சமூகத்தினர் சமீபத்தில் பழங்குடியினராக அந்தஸ்து பெற்றனர். அங்குள்ள சுமார் 1,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட டிரான்ஸ்கிரி பகுதியில் 154 பஞ்சாயத்துகள் உள்ளன.

    இங்கு ஹட்டி சமூகத்தினரை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையில் தவிக்கும் இப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதாக வினோத தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த பகுதியை சேர்ந்த சுனிலா தேவி என்ற பெண் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிர்மவுர் பகுதியில் உள்ள ஜமுனா கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை திருமணம் செய்தார்.

    ஏழ்மையில் வாடிய இந்த குடும்பத்தினர் ஒரு சிறிய அறையில் தான் வாழ்க்கையை நடத்தி வந்தனர். அதிலும் கணவரின் குடும்பம் மிகப்பெரியது என்ற நிலையில் சிறிய அறையில் பாதி இடத்தில் சுனிலா தேவியின் இல்லற வாழ்க்கையும் நடைபெற்றுள்ளது. சில நேரங்களில் அரை சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர்.

    அப்போது சுனிலா தேவியின் கணவரது இளைய சகோதரர் பள்ளியில் படித்து கொண்டிருந்தார்.

    கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சுனிலா தேவி, பள்ளியில் படிக்கும் தனது மைத்துனருக்கு மதிய உணவு தயார் செய்து கொண்டு சென்றுள்ளார். காலங்கள் கடந்தன.

    தனது கணவரின் இளைய சகோதரர் படிப்பை முடித்து வளர்ந்த நிலையில் அவனையும் திருமணம் செய்து கணவராக ஏற்றுக்கொள்ளும்படி சுனிலா தேவியின் கணவர் கூறியுள்ளார்.

    நான் வேலை விஷயமாக அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே சென்றுவிடுவேன். எனவே எனது சகோதரன் உன்னையும், குழந்தைகளையும் நன்றாக கவனித்து கொள்வார். எனவே நீ அவனையும் திருமணம் செய்து கணவனாக ஏற்றுக்கொள் என கட்டாயப்படுத்தி உள்ளார். இதைக்கேட்டு சுனிலா தேவி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் தனது மாமியாரிடம் முறையிட்டார். அப்போது உனது கணவர் சொன்னதை ஏற்றுக்கொள். அப்போது தான் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என மாமியார் அறிவுறுத்தி உள்ளார்.

    இது சுனிலாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் இதுதொடர்பாக தனது மாமனாரிடம் கூறியுள்ளார். அவரோ, இங்கே மிகவும் வறுமை இருக்கிறது. நீ ஒப்புக்கொண்டால் குடும்பம் பிரியாமல் ஒற்றுமையாக இருக்கும் என கூறியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் சுனிலா தேவி கணவரின் இளைய சகோதரரையும் மணம் முடித்துள்ளார்.

    2 பேருடனும் குடித்தனம் நடத்தியது ஆரம்பத்தில் சுனிதா தேவிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. என்றாலும் நாளடைவில் அது வழக்கமாகி விட்டது. தற்போது 2 கணவர்களில் இளைய கணவர் தான் தன்னை அதிகம் கவனித்து கொள்வதாக சுனிலா தேவி கூறுகிறார்.

    அவர் கூறுகையில், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது இளைய கணவர் தான் என்னை நன்கு கவனித்து கொள்கிறார் என்கிறார். சுனிலா தேவியை போலவே அதே கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் வசிக்கும் மீனா தேவி என்ற பெண்ணின் வாழ்க்கை கதையும் இதேபோல் உள்ளது. அவர் தனது கணவரின் 3 சகோதரர்களுடன் ஒரு ஆஸ்பெடாஸ் கூரையுடன் கூடிய வீட்டில் வாழ்க்கை நடத்தி வருகிறாராம்.

    இதுகுறித்து மீனா தேவி கூறுகையில், எனது கணவரின் 2 சகோதரர்களும், வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால் எல்லாவற்றையும் 3 பேருக்குள்ளேயும் பிரிக்க வேண்டியது இருக்கும். இதனால் நாங்கள் ஒன்றாக கூடி கூட்டுத் திருமணமே எங்களுக்கு சிறந்தது என்று முடிவு செய்தோம்.

    அதன்படி எனது கணவரின் 2 சகோதரர்களையும் திருமணம் செய்து கொண்டு 3 பேருடனும் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். வறுமையின் சாபத்தில் இருந்து நாங்கள் பிழைத்துள்றோம் என்றார்.

    • விளையாட்டு, யோகா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.
    • கேரளாவை சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி ஒவ்வொறு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் 'மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உடையாற்றுகிறார்.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.

    நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். விளையாட்டு, யோகா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.

    மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பல பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அப்போது அவர் ஆந்திர மாநிலம் 'அரக்கு காபி', கேரள மாநிலம் 'கார்தும்பி குடைகள்' பற்றியும் பேசினார். 'கார்தும்பி குடைகள்' பற்றி பிரதமர் மோடி கூறியதாவது:-

    கேரள கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சடங்குகளில் குடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரளாவின் அட்டப்பாடியில் தயாராகும் 'கார்தும்பி குடைகள்' சிறப்பு வாய்ந்தவை. இந்த வண்ணமயமான குடைகளை கேரளாவை சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர்.

    இன்று இந்த குடைகளின் தேவை நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. இந்த குடைகள் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. வத்தலக்கி கூட்டுறவு விவசாய சங்கத்தின் மேற்பார்வையில் 'கார் தும்பி குடைகள்' தயாரிக்கப்படுகின்றன. இந்த சமூகம் பெண் சக்தியால் இயக்கப்படுகிறது.

    பெண்களின் தலைமையின் கீழ் அட்டப்பாடி பழங்குடி சமூகம் முன்முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணத்தை உருகாக்கியுள்ளது. இவர்கள் குடைகளை மட்டும் விற்கவில்லை. அவர்களது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் அறிமுகம் செய்கின்றனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    'மன் கி பாத்' நிகழ்ச்சியில் `கார் தும்பி குடைகள்' மற்றும் அதனை தயாரிக்கும் பழங்குடியின பெண்கள் பற்றி பிரதமர் மோடி பேசியிருப்பது கேரளாவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் `கார் தும்பி குடைகள்' தயாரித்துவரும் அட்டப்பாடி பழங்குடியின பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியை சேர்ந்த பழங்குடியின கிராம பெண்களால் 'கார்தும்பி குடைகள்' தயாரிக்கப்படுகிறது. தொழில்நுட்ப சமூகம் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து 'கார் தும்பி குடைகள்' இந்த பருவமழையில் சந்தைக்கு வந்துள்ளன.

    சுமார் 50 முதல் 60 பழங்குடியின பெண்கள் `கார் தும்பி குடைகள்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு 20-30 குடைகளுக்கும், அவர்கள் தினமும் 600 முதல் 800 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். தற்போது பல இ-காமர்ஸ் இணையதளங்களில் குடைகள் ரூ.350-390க்கு விற்கப்படுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது.
    • பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். இவர் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டனர்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், பழங்குடி மக்கள் இந்துக்கள் கிடையாது. பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இந்து பெண்களை போல பழங்குடி பெண்கள் தாலி அணிய வேண்டாம். குங்குமமும் வைக்க வேண்டாம். நான் கூட தாலி அணிவதில்லை. குங்குமம் வைப்பதில்லை. விரதம் கூட இருப்பதில்லை.

    பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் கடவுள்களின் இல்லமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் விரதங்கள் கடைபிடிப்பதை நிறுத்துங்கள். சாமியார்கள், பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.

    மேனகா பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில், ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    மேனகா ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று அம்மாநில கல்வித்துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

    அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் மேனகா, ராஜஸ்தானில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா (Adivasi Parivar Sanstha) என்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
    • பாராட்டு தெரிவிக்கும் வகையில் பணத்தை வழங்கியதாக கூறினார்.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் மொத்தமுள்ள 147 இடங்களில் பா.ஜ.க. 78 இடங்களை கைப்பற்றியது.

    இதன் மூலம் ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை பா.ஜ.க. முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து அங்கு மோகன் சரண்மாஜி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒடிசாவில் சுந்தர்கர் மாவட்டத்தில் பா.ஜ.க. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் பைஜயந்த் ஜெய்பாண்டா கலந்து கொண்டார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர், பைஜயந்த் ஜெய்பாண்டாவிடம் 100 ரூபாய் கொடுத்து பிரதமர் மோடிக்கு அனுப்புமாறு கூறியதோடு, பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்தார்.

    அவரிடம் பைஜயந்த் ஜெய்பாண்டா பிரதமருக்கு நன்றி தெரிவித்தால் போதும், பணம் அவசியம் இல்லை என வலியுறுத்திய போதும், அந்த பெண் தனது நன்றியை தெரிவிக்க இந்த பணத்தை பிரதமருக்கு அனுப்புமாறு கூறினார்.

    மேலும், பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அந்த பணத்தை வழங்கியதாக அவர் கூறினார்.

    இது தொடர்பான புகைப்படத்தை பைஜயந்த் ஜெய்பாண்டா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதோடு அந்த பெண்ணின் நேர்மையையும், அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் தலைமையின் மீது மக்கள் கொண்டுள்ள நல்ல மாற்றங்களுக்கும், நம்பிக்கைக்கும் இந்த சைகை ஒரு சான்றாகும் என்றார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், எப்போதும் என்னை ஆசீர்வதிக்கும் எங்கள் நாரி சக்திக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் ஆசீர்வாதங்கள் என்னை விக்சித் பாரதத்தை உருவாக்க உழைக்க தூண்டுகின்றன என்று பதில் அளித்துள்ளார்.

    ×