என் மலர்
நீங்கள் தேடியது "Minister AV Velu"
- கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிதாக 4 சுற்றுலா மாளிகை கட்டப்படும்.
- ஏற்காடு உள்பட 3 இடங்களில் புதிதாக 3 ஆய்வு மாளிகைகள் கட்டப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று பேசியதாவது:
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் பொதுப்பணித் துறை சார்பில் 7 புதிய அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஓசூரில் புதியதாக 4 சுற்றுலா மாளிகைகள் ரூபாய் 21.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
கடலூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 6 கோடி மதிப்பீட்டிலும், காஞ்சிபுரத்தில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டிலும், திருவள்ளூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 9.90 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும்.
கல்வராயன் மலை, ஏற்காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் புதியதாக 3 ஆய்வு மாளிகைகள் ரூபாய் 9.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 5 கோடி மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 2 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும் என தெரிவித்தார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கோவில் கிரிவலப்பாதையை ரூ.5 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
- அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அரசு முதன்மைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னி லையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தனர்.பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
இருக்கன்குடி கோவி லுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, நடைபாதையும், சாலைகளும் அமைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கேட்டுக்கொண்டதற் கிணங்க, ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சில நாட்களில் தொடங்க உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள திருவண்ணாமலை கோவி லின் கிரிவலப்பாதையை 2.50 கி.மீ. மேம்படுத்தும் பணி ரூ.5 கோடி மதிப்பில் பணிகள் தொடங்க உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 2022-23-ம் நிதியாண்டில் 17 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடக்கப்பட்டு, இந்த ஆண்டே பணிகள் முடிவ டைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து விருதுநகர் செல்லும் சாலைகளை இணைத்து வட்டப்பாதையாக 33.5 கி.மீட்டருக்கு தேவையான நிலம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ராஜபாளையம்- வெம்பக்கோட்டை சாலையில் ராஜபாளையம் ரெயில் நிலையம் அருகில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கட்டப்ப டவுள்ள தொழிற்ப யிற்சி நிலையங்களில் 3 தொழிற்பயிற்சி நிலை யங்கள் விருதுநகர்,
அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளில் புதிய தொழிற்நுட்ப பிரிவுகளுடன் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை இன்றும் நடைபெறுகிறது.
- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடந்துவருகிறது.
சென்னை:
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் அலுவலகங்கள், அமைச்சரின் முகாம் அலுவலகம், வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று 3-வது நாளாக சோதனை நீடித்தது. அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
திருவண்ணாமலையில் திண்டிவனம் ரோட்டில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் வீடு, காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நீடித்து வருகிறது.
சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும்.
- யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
மதுரை:
மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள், கலைஞர் நூற்றாண்டு செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் பயன்படுத்தி உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
மதுரை கோரிப்பா ளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது.
மதுரை அப்போலோ உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும். இப்பாலப் பணிகள் 32 சதவீதம் முடிவடைந்துள்ளது.
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது.
2001-ம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை.
எனக்கும், தி.மு.க.வுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரும் ஆண்டில் திட்டம் தயார் செய்யும் பணி தொடங்கப்படும்.
- சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, (தி.மு.க.) கேளம்பாக்கம்-வண்டலூர் இணைப்பு சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என சட்ட சபையில் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தெரிவித்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் ஆண்டில் அதற்கான திட்டம் தயார் செய்யும் பணி தொடங்கப்படும் என்றார்.
மாடம்பாக்கம், சிட்ல பாக்கம், குறிஞ்சி நகர் பகுதி யில் கூடுதல் வீடுகள் வந்து உள்ளதால் 3 துணை மின் நிலையங்கள் அமைத்து அதில் கூடுதல் நிருவு திறன் அமைக்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்கையில் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
- மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும்.
- இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை.
சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன. அதை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும்.
கூவம் நதி சென்னை முழுவதும் ஒடும் நதி. மழை காலத்திற்கு பின்னர், கூவம் நதியை சீர் செய்யும் நடவடிக்கையை அரசு மேற் கொள்ளும். அதன் பிறகு லண்டனில் நாம் பார்ப்பதை போல் இங்கும் காண முடியும். மதுரவாயல்-துறைமுகம் மேம்பால விரைவு சாலையை 2024 ஆம் ஆண்டு திறக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






