search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு
    X

    10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
    • 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் சூரியத்தோட்டம் அமைக்கப்படும்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 கோடி மதிப்பீட்டில் செம்பருத்தி நடவு செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

    தென்காசி மாவட்டத்தில 1 கோடி மதிப்பீட்டில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்.

    உதகையில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்ய ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு.

    முந்திரி சாகுபடிப் பரப்பை அதிகரிக்க ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

    மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

    மிளகாய்ப் பயிர் ஊக்குவிப்புத் திட்டம் ரூ.3.67 கோடி நிதி ஒதுக்கீடு.

    மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு.

    10 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நேரடி விற்பனை மையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி.

    26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு.

    பவர் டில்லர்களின் மானியத் தொகை ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

    207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.32.9 கோடி நிதி ஒதுக்கீடு.

    தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலி உருவாக்க ரூ.50 லட்சம் நிதி.

    புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.28.82 கோடி நிதி ஒதுக்கீடு.

    10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    மழை நீர் சேகரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    வேளாண் இயந்திரங்களை பரவலாக்குவதற்கான தொழில்நுட்பக் கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    10 மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடமாடும் உலர்த்திகள் வாங்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு.

    நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

    5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்கள், 8 மஞ்சள் வேகவைக்கும் இயந்திரங்கள் அமைக்க ரூ.2.12 கோடி நிதி

    பெரம்பலூரில் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும்.

    100 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் கட்டமைப்பு வசதிகளை புதுப்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.

    10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×